Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் விநாயகர் ... விபத்தில் பலியான மகனுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய தந்தை விபத்தில் பலியான மகனுக்கு கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தடையை மீறி 24 இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா : சிலைகள் ஆற்றில் கரைப்பு
எழுத்தின் அளவு:
தடையை மீறி 24 இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா :  சிலைகள் ஆற்றில் கரைப்பு

பதிவு செய்த நாள்

11 செப்
2021
05:09

அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில் தடையை மீறி இந்து முன்னணி சார்பில், 24 பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, மாலையில் பவானி ஆற்றில் கரைக்கப்பட்டன. அன்னூர் வட்டாரத்தில், அன்னூர் நகர், கஞ்சப்பள்ளி, கணேசபுரம், அக்கரை செங்கப்பள்ளி, அச்சம்பாளையம், ஜெ.ஜெ. நகர் உள்ளிட்ட 24 இடங்களில் அரசு தடையை மீறி நேற்று அதிகாலையில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 4:00 மணிக்கு, அனைத்து விநாயகர்களும் அன்னூர் ஓதிமலை ரோட்டுக்கு சரக்கு ஆட்டோ மற்றும் வேன்களில் கொண்டு வரப்பட்டன. அங்கு சிறப்பு பூஜை செய்யப்பட்ட பிறகு அவற்றை சிறுமுகை பவானி ஆற்றில் கரைக்க கொண்டு சென்றனர்.

இந்து முன்னணி கோவை வடக்கு மாவட்ட செயலாளர் குட்டி காவி கொடியசைத்து விசர்ஜனத்திற்கு அனுப்பி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்தி, நகர தலைவர் சிவக்குமார், ஒன்றிய தலைவர்கள் மாரப்பன், பிரகாஷ் உள்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போலீசார் விநாயகர் செல்லும் வாகனங்களில் நான்கு பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்று கூறி மற்றவர்களை இறக்கி விட்டனர். அப்போது சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அன்னூர் போலீசார் 50 பேர், தாசில்தார்கள் ரத்தினம், ரங்கராஜன் உள்ளிட்டோர் விநாயகர் சதுர்த்தி விழாவை கண்காணித்தனர். பிள்ளையப்பம்பாளையத்தில் நேற்று முன்தினம் இரவு விநாயகர் சதுர்த்தி பந்தலை போலீசார் சிலருடன் சேர்ந்து அகற்றியதால், மாவட்ட நிர்வாகிகள் அங்கு குவிந்தனர். மறியலில் ஈடுபடப் போவதாக கூறினர். இன்ஸ்பெக்டர் நித்யா பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர். அரசு பொது இடங்களில் விநாயகர் வைக்க அனுமதி இல்லை என்று கூறிய போதும் அன்னூர் மற்றும் எஸ்.எஸ். குளம் ஒன்றியத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. எனினும் ஊர்வலம் நடைபெறவில்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில் சித்திரை மாத பிரம்மோத்சவம், கடந்த 13ம் தேதி ... மேலும்
 
temple news
பொன்னேரி; பொன்னேரி, திருவாயற்பாடி சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் மற்றும் பாஷ்யகார ஸ்வாமி கோவில் உள்ளது. கடந்த, ... மேலும்
 
temple news
திருநீர்மலை; பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், பிரசித்திபெற்ற ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar