பதிவு செய்த நாள்
26
அக்
2021
02:10
கூடலூர்: கூடலூர், புத்துார்வயல் பகுதியில் பழங்குடி மக்களின் பாரம்பரியமான பூ புத்தரி எனப்படும், நெற்கதிர் அறுவடை திருவிழா சிறப்பாக நடந்தது
நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் பனியர் இன பழங்குடி மக்கள் சார்பில், நெற்பயிர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், அறுவடைக்கு முன் பாரம்பரியமாக பூ புந்தரி எனப்படும், அறுவடை திருவிழாவை ஆண்டு தோறும், ஐப்பசி மாதம் 10 நாள் கொண்டாடி வருகின்றனர். நடப்பாண்டுக்கான திருவிழா இன்று நடந்தது. பழங்குடி மக்கள், நம்பாலக்கோட்டை வெட்டக்கொருமகன் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று, ஊர்வலமாக புத்தூர்வயல் வந்தனர். அங்கு தேர்வு செய்யப்பட்ட வயலில், பாரம்பரிய இசையுடன் விளக்கேற்றி பூஜை செய்தனர். தொடர்ந்து, பூ புத்தரி எனப்படும் அறுவடை திருவிழா நடந்தது.
10 நாட்கள் விரதம் இருந்த ஆண்கள் நெற்கதிர் அறுவடை செய்து, கட்டுகளாக கட்டி வயலை வலம் வந்தனர். தொடர்ந்து நற்கதிர் கட்டை ஊர்வலம், வட்டபாறை பாறை பாகவதி அம்மன் கோவிலுக்கு எடுத்து செய்தனர். தொடர்ந் பழங்குடி பெண்கள் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடந்தது. அங்கிருந்து, நெற்கதிரில் ஒரு கட்டு மஙகுழி பகவதி அம்மன் கோவிலுக்கும், மற்றொன்று விஷ்ணு கோவிலுகடும், மூன்றாவது கட்டு நம்பாலக்கோட்டை வெட்டக்கொருமகன் கோயிலுக்கும் ஊர்வலமாக எடுத்து சென்றனர். கோவில்களில், நெற்கதிருக்கு சிறப்பு பூஜை செய்து விவசாயிகளுக்கு பிரசாதமாக வழங்கினர்.