Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் யாகசாலை ... காவிரி நதியில் விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு காவிரி நதியில் விளக்கேற்றி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சையில் ராஜராஜ சோழனின் 1036 வது சதய விழா பந்தக்கால் முகூர்த்தம்
எழுத்தின் அளவு:
தஞ்சையில் ராஜராஜ சோழனின் 1036 வது சதய விழா பந்தக்கால் முகூர்த்தம்

பதிவு செய்த நாள்

08 நவ
2021
11:11

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலை கட்டிய, மாமன்னன் ராஜராஜசோழனின் 1,036 வது சதய விழாவிற்கான, பந்தக்கால் முகூர்த்தம் நடப்பட்டது. தஞ்சாவூர், பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தின் அன்று, ராஜராஜ சோழனுக்கு சதய விழா என்ற பெயரில்,இரண்டு நாட்கள் சிறப்பாக விழா கொண்டாடுவது வழக்கம்.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக விழா சிறப்பாக கொண்டாடப் படவில்லை. எனினும் பெருவுடையாருக்கு அபிஷேகம் மற்றும் பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு மட்டும்  நடைபெற்றது. இந்த ஆண்டும் கொரோனோ அச்சம் காரணமாக 1036ம் ஆண்டு சதய விழா வருகிற 13ம் தேதி அன்று ஒரு நாள் மட்டும் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு பெரிய கோவிலுக்கு வெளியே உள்ள மாமன்னர் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது. அதன் பிறகு கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் ஊழியர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்படுகின்றன. காலை 9 மணிக்கு  பெருவுடையாருக்கு 36 வகை பொருட்களால், பேராபிஷேகமும், மகா தீபாராதனை நடைபெறுகிறது. அன்று மாலை 6 மணிக்கு சுவாமி,  அம்பாள் பஞ்ச மூர்த்திகள், மாமன்னர் ராஜராஜ சோழன் சிலையுடன் கோவில் பிரகாரத்திற்குள் உலா நடைபெறும். இந்த சதய விழாவையொட்டி இன்று  காலை 7 மணிக்கு பந்தக்கால் நடும்  நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சதய விழாக்குழு தலைவர் செல்வம், துணைத் தலைவர் மேத்தா, பரம்பரை அறங்காவலர் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் கிருஷ்ணன், செயல் அலுவலர் மாதவன் மற்றும் பக்தர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தஞ்சை பெரிய கோவில் கண்காணிப்பாளர் ரெங்கராஜன் மற்றும் தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் ஊழியர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சில ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி; வாணியந்தல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள  வள்ளி தேவசேனா சமேத செங்கல்வராய ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அர்ச்சுனாபுரத்தில் நல்லதங்காள் கோயிலில் ... மேலும்
 
temple news
திருக்கழுக்குன்றம்; திருக்கழுக்குன்றத்தில், துார் வாரப்படும் கோவில் குளத்தில் கிடந்த நந்தி சிலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar