திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், டிசம்பர் 3ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி பெருவிழா தொடங்க உள்ளதையொட்டி, ஆயிரங்கால் மண்டபம் அருகே, முகூர்த்தக்கால் நடப்பட்டது.
வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்கான முகூர்த்தக்கால் நடும் வைபம்.... ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில்வருகிற 03 .12. 2021 முதல் 24.12.2021 வரை வைகுந்த ஏகாதசி பெருவிழா நடைபெறுவதை முன்னிட்டு இன்று (10ம் தேதி) காலை 11.00 - 11.45 மணிக்குள் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்கான முகூர்த்தகால் நடும் வைபவம் ஆயிரங்கால் மண்டபம் அருகில் கோயில் இணை ஆணையர் திரு செ. மாரிமுத்து முன்னிலையில் நடபெற்றது. வைகுண்ட ஏகாதசி பெருவிழா 03.12 .2021 அன்று திருநெடுந்தாண்டகமும் , O4.12.2021 முதல் 13.12.2021 வரை பகல் பத்து திருவிழாக்களும் , 13.12.2021 அன்று ஸ்ரீ நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலமும், முக்கியத் திருநாளான ஸ்ரீ நம் பெருமாள் இரத்தினங்கியுடன் பரமபத வாசல் திறப்பு 14.12 .2021 செவ்வாய் க்கிழமை காலை 04.30-05.45மணிக்குள்ளும் நடைபெரும் மேலும் 20.12 .2021 ஸ்ரீநம்பெருமாள் கைத்தல சேவையும் , 21.12.2021 அன்று திருமங்கை மன்னன் வேடுபறி திருவிழாவும். 23.12.20221அன்று தீர்த்தவாரியும், 24.12 . 2021 அன்று ஸ்ரீநம்மாழ்வார் மோட்ச்சமும் நடைபெறுகிறது.