Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீரட்டானேஸ்வரர் கோவிலில் நாளை ... சாக்கோட்டையில் ஆனி திருவிழா: 63 நாதஸ்வரம், தவிலிசை கச்சேரி! சாக்கோட்டையில் ஆனி திருவிழா: 63 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்காலில் இன்று மாங்கனி திருவிழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2012
10:07

காரைக்கால்: காரைக்கால் மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான காரைக்கால் அம்மையார் - பரமதத்தர் திருக்கல்யாணம் நேற்று நடந்தது.சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார். 63 நாயன்மார்களில் பெண் நாயன்மாரான இவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா நடக்கிறது. இத்திருவிழா கடந்த 1ம் தேதி துவங்கியது.

திருக்கல்யாணம்: விழாவின் முக்கிய நிகழ்வாக, காரைக்கால் அம்மையார் - பரமதத்தர் திருக்கல்யாணம் நேற்று காலை நடந்தது. காலை 10.30 மணிக்கு மங்கள வாத்தியங்கள் ஒலிக்க, வேத மந்திரங்கள் முழங்க புனிதவதியாருக்கு, பரமதத்தர் திருமாங்கல்யம் அணிவித்தார். பக்தர்களுக்கு மாங்கல்யம், மஞ்சள், குங்குமம், மாங்கனியுடன் தாம்பூலப் பை வழங்கினர்.

மாங்கனி திருவிழா:இன்று அதிகாலை 3 மணிக்கு, பிச்சாடணமூர்த்தி மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடக்கிறது. காலை 7.30 மணிக்கு பரமதத்தர், இரண்டு மாங்கனிகளை வீட்டிற்கு கொடுத்து அனுப்புதல், 9 மணிக்கு வேத பாராயணம் முழங்க, பவழக்கால் விமானத்தில் சிவபெருமான் காவியுடை, ருத்திராட்சம் தாங்கி பிச்சாண்டவர் புறப்பாடு நடக்கிறது.பக்தர்கள் சுவாமிக்கு மாங்கனி வைத்து தீபாராதனை செய்து, பின் வீட்டின் மாடிகளில் இருந்து வீசும் வைபவம் நடக்கிறது.அமுது படைத்தல்: மாலை 5 மணிக்கு, அடியார் கோலத்தில் திருமாளிகையில் எழுந்தருளும் சிவபெருமானை, புனிதவதியார் அழைத்து வந்து மாங்கனியுடன் அமுது படைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6 மணிக்கு, பரமதத்தர் உணவு அருந்த இல்லத்திற்கு வருதலும், ஒரு மாங்கனியை ருசித்த அவர், மற்றொன்றை கேட்க, புனிதவதியார் இறைவனை வேண்டி மற்றொரு மாங்கனி பெற்றுத் தரும் காட்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
புது டில்லி;  தலைநகர் டில்லியில் முகாமிட்டுள்ள, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தர பிரதேசத்தில், பிரமாண்ட ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar