Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீரட்டானேஸ்வரர் கோவிலில் நாளை ... சாக்கோட்டையில் ஆனி திருவிழா: 63 நாதஸ்வரம், தவிலிசை கச்சேரி! சாக்கோட்டையில் ஆனி திருவிழா: 63 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்காலில் இன்று மாங்கனி திருவிழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2012
10:07

காரைக்கால்: காரைக்கால் மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான காரைக்கால் அம்மையார் - பரமதத்தர் திருக்கல்யாணம் நேற்று நடந்தது.சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார். 63 நாயன்மார்களில் பெண் நாயன்மாரான இவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா நடக்கிறது. இத்திருவிழா கடந்த 1ம் தேதி துவங்கியது.

திருக்கல்யாணம்: விழாவின் முக்கிய நிகழ்வாக, காரைக்கால் அம்மையார் - பரமதத்தர் திருக்கல்யாணம் நேற்று காலை நடந்தது. காலை 10.30 மணிக்கு மங்கள வாத்தியங்கள் ஒலிக்க, வேத மந்திரங்கள் முழங்க புனிதவதியாருக்கு, பரமதத்தர் திருமாங்கல்யம் அணிவித்தார். பக்தர்களுக்கு மாங்கல்யம், மஞ்சள், குங்குமம், மாங்கனியுடன் தாம்பூலப் பை வழங்கினர்.

மாங்கனி திருவிழா:இன்று அதிகாலை 3 மணிக்கு, பிச்சாடணமூர்த்தி மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடக்கிறது. காலை 7.30 மணிக்கு பரமதத்தர், இரண்டு மாங்கனிகளை வீட்டிற்கு கொடுத்து அனுப்புதல், 9 மணிக்கு வேத பாராயணம் முழங்க, பவழக்கால் விமானத்தில் சிவபெருமான் காவியுடை, ருத்திராட்சம் தாங்கி பிச்சாண்டவர் புறப்பாடு நடக்கிறது.பக்தர்கள் சுவாமிக்கு மாங்கனி வைத்து தீபாராதனை செய்து, பின் வீட்டின் மாடிகளில் இருந்து வீசும் வைபவம் நடக்கிறது.அமுது படைத்தல்: மாலை 5 மணிக்கு, அடியார் கோலத்தில் திருமாளிகையில் எழுந்தருளும் சிவபெருமானை, புனிதவதியார் அழைத்து வந்து மாங்கனியுடன் அமுது படைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6 மணிக்கு, பரமதத்தர் உணவு அருந்த இல்லத்திற்கு வருதலும், ஒரு மாங்கனியை ருசித்த அவர், மற்றொன்றை கேட்க, புனிதவதியார் இறைவனை வேண்டி மற்றொரு மாங்கனி பெற்றுத் தரும் காட்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar