சபரிமலை: சபரிமலை ஐயப்பனுக்கு ஆன்லைனில் காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்கள் 94959 99919 என்ற எண் மூலம் அனைத்து செயலிகளிலும் இருந்தும் பணம் செலுத்தலாம். கொரோனா காரணமாக தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு உள்ளதால் ஏராளமான பக்தர்கள் சபரிமலை செல்ல முடியாமல் உள்ளனர். எனினும் இவர்கள் ஐயப்பனுக்கு காணிக்கை செலுத்த விரும்பினால் அதற்கான வசதிகளை தனலெட்சுமி பேங்குடன் இணைந்து தேவசம் போர்டு செய்துள்ளது.
பணபரி மாற்றத்துக்கான எந்த செயலிகளில் இருந்தும் இந்த எண்ணுக்கு பணம் செலுத்தினால் அது தேவசம்போர்டு கணக்குக்கு சென்று விடும்.சன்னிதானத்தில் 20 இடங்களில் கியூ.ஆர். கோடு அடங்கிய அட்டை பொருத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் இதனை ஸ்கேன் செய்தும் பணம் செலுத்தலாம்.சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் உள்ள ஓட்டல்களில் உள்ள உணவு பற்றிய புகார் இருந்தால் 1800 425 1125 என்ற இலவச அழைப்பு எண்ணிலும், 85929 99666 என்ற எண்ணிலும் புகார் செய்யலாம்.