Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிங்கவரம் ரங்கநாதர் கோவிலை ... குப்பேபாளையம் மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் கோவிலில், வைணவ பயிற்சி சான்றிதழ் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் கோவிலில், வைணவ பயிற்சி சான்றிதழ் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

பதிவு செய்த நாள்

25 நவ
2021
05:11

சென்னை:ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில், வைணவ பயிற்சி சான்றிதழ் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சட்டசபையில், அறநிலையத் துறை மானிய கோரிக்கையின் போது, ஆறு அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள், 1.50 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். இதையடுத்து, ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில், வைணவம் பாஞ்சராத்ர ஆகமத்திற்கான ஓராண்டு சான்றிதழ் பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளன.

விண்ணப்பதாரர்கள் ஹிந்துக்களாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஹிந்து வைணவ கோட்பாடுகளை கடைப்பிடிப்பவர்களாக இருக்க வேண்டும்.பயிற்சி பெறும் மாணவர்கள், பயிற்சி நிலைய வளாகத்திலேயே தங்கி பயில வேண்டும். பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவருக்கு இலவசமாக உணவு, சீருடை, உறைவிடம், பயிற்சி காலத்தில் மாதம் ஒன்றுக்கு 3,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். இப்பயிற்சியில் சேர விரும்புபவர்கள் விண்ணப்ப படிவங்களை, கோவில் இணையதளமான, www.srirangam.org; ஹிந்து சமய அறநிலையத்துறை இணையதளமான, www.hrce.tn.gov.in ஆகியவற்றில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த வைணவ பயிற்சி வகுப்புகளில் ஆர்வமுள்ள மாணவ - மாணவியர் விண்ணப்பித்து பயனடையலாம் என இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

அன்னதான நன்கொடை : ஸ்ரீரங்கம் திருக் கோயிலில் நடைபெறும் நாள் முழுதும் அன்னதானத்தில் தினசரி சுமார் 2500 பக்தர்களும் விடுமுறை மற்றும் திருவிழா காலங்களில் சுமார் 5000 பக்தர்களும் உணவு அருந்தி செல்கின்றனர். இந்த  திட்டத்திற்கு உதவும் வகையில் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பக்தர் திரு.பிரகாஷ் என்பவர் ரூபாய்  ஏழு லட்சத்திற்கான காசோலையை  கோயில் இணை ஆணையர் திரு செ. மாரிமுத்து அவர்களிடம் நன் கொடையாக வழங்கினார், நாள் முழுதும் அன்னதான திட்டத்திற்கு நன்கொடை வழங்குபவர்கள் கீழ்கண்ட திருக்கோயில் வங்கி கணக்கில் இணைவழியிலும் செலுத்தலாம்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கரிங்கரைப்புள்ளி காடாங்கோடு பகவதி அம்மன் கோவில் பிரதிஷ்டை தின உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; அஷ்டமி பூப்பிரதட்சனம் யொட்டி ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், உலக சாதனை முயற்சியாக, 900க்கும் மேற்பட்ட நாட்டிய ... மேலும்
 
temple news
கூடலுார்; கூடலுார் கூடலழகிய பெருமாள் கோயிலில் கூடாரவல்லி திருவிழா வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு வரும் பாதயாத்திரை சாரல் மலையில் சாலைகளில் பாதுகாப்புக்கு இன்றி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar