சபரிமலை: சபரிமலை தரிசனத்துக்கான முன்பதிவு எண்ணிக்கை நேற்று மாலை மீண்டும் அதிகரிக்கப்பட்டது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால சீசன் துவக்கத்தில் தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஒரு சில நாட்களை தவிர்த்து மீதமுள்ள அனைத்து நாட்களிலும் முன்பதிவு முடிந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த எண்ணிக்கை 45 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது. டிச., ஜனவரியில் பெரும்பாலான நாட்களுக்கான முன்பதிவு சில மணி நேரத்திலேயே முடிந்து விட்டது. இந்நிலையில் நேற்று மாலை மீண்டும் அனைத்து நாட்களுக்கும் முன்பதிவு அனுமதிக்கப்பட்டிருந்தது. கூடுதலாக தினசரி 5,000 பக்தர்கள் வரை முன்பதிவு செய்வதற்காக வசதி காணப்பட்டது. இது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தரிசனத்துக்கு முன்பதிவு செய்பவர்கள் அப்பம், அரவணை பிரசாதத்துக்கும் முன்பதிவு செய்தால் சன்னிதானத்தில் நேரத்தைமிச்சப்படுத்த முடியும். எவ்வளவு பிரசாதம் வேண்டும் என்பதைபதிவு செய்து அதற்கான பணத்தைஆன்லைனில் செலுத்த வேண்டும். அதன்பின்கிடைக்கும் கூப்பனில் இதற்கான‘பார்கோடு’ இருக்கும். இதை18ம் படிக்கு தெற்குபக்கம் உள்ள6ம் எண் கவுன்டரில் காட்டினால் பிரசாதம் உடனடியாக கிடைக்கும். இதன் மூலம் பிரசாதத்துக்கு டிக்கெட் வாங்க வரிசையில் நிற்கும் நேரம் மிச்சமாகும். இதற்கிடையே சபரிமலைவரும் பக்தர்களில் 5 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழ் தேவையில்லை எனதிருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.