Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில்களில் அமலுக்கு வந்தது ... விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் சிறப்பு பூஜை விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாடகை தராவிட்டால் வவ்வாலாக பிறப்பீர்கள்: மதுரை ஆதினம்
எழுத்தின் அளவு:
வாடகை தராவிட்டால் வவ்வாலாக பிறப்பீர்கள்: மதுரை ஆதினம்

பதிவு செய்த நாள்

11 டிச
2021
01:12

மானாமதுரை: கோயிலுக்கு உண்டான கடனை செலுத்தாதவர்கள், வாடகை கொடுக்காதவர்கள் உடனடியாக கொடுத்துவிடுங்கள் அப்படி இல்லை என்றால் அடுத்த ஜென்மத்தில் வவ்வாலாகவோ , பெருச்சாளியாகவோ பிறக்க நேரிடும் என மதுரை ஆதினம் ஞானசம்பந்த பராமாச்சாரிய சுவாமிகள் கூறினார். கோயில்களுக்குச் சென்று வழிபாடு . செய்தால் உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படும் என்று மதுரை ஆதீனம் தஞ்சாக்கூரில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பேசினார் .

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள தஞ்சாக்கூரில் ஜெகதீஸ்வரர் சமேத திரிபுரசுந்தரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு மதுரை ஆதீனம் பேசியதாவது: தமிழகத்தில் நமது முன்னோர்கள் தினந்தோறும் கோயில்களுக்குச் சென்று தங்களது உடலை புத்துணர்ச்சியாக வைத்திருந்தனர். அதேபோல் தற்போது நாமும் தினந்தோறும் கோயில்களுக்குச் சென்று உடலை புத்துணர்ச்சியாக வைத்திருக்க முயற்சிக்க வேண்டும் . ஆனால் தற்போது பலர் தினந்தோறும் அலைபேசிக்கு தான் சார்ஜ் ஏற்றுகின்றனர். உடலுக்கு சார்ஜ் ஏற்ற கோயில்களுக்கு செல்வதில்லை . தற்போது டி.வி. , அலைபேசி மற்றும் மின்சார பொருள்களுக்கு கியாரண்டி உண்டு . அதேபோல் ஒரு வேட்டி சேலை வாங்கினால் கூடுதலாக இலவசமாக நான்கு வேட்டி சேலைகள் கூட கொடுக்கின்றனர் .ஆனால் இந்த மனித உடலுக்கு நிரந்தரம் என்று எதுவும் உள்ளதா . ஆகவே மனிதர்கள் இருக்கின்ற காலத்தில் நல்ல செயல்களை செய்ய வேண்டும். மனிதர்கள் தற்போது தங்களது உடலை அழகுபடுத்த அழகு நிலையங்களில் அதிக நேரம் ஒதுக்குகின்றனர்.ஆனால் இறை வழிபாட்டுக்கு என்று நேரம் ஒதுக்குவது கிடையாது . தமிழகத்தில் பண்பாடு , கலாச்சாரம் போன்றவை கிராமங்களில்தான் உள்ளது . கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் கடைகளை குத்தகைக்கு எடுத்து வாடகை கொடுக்காதவர்கள் அல்லது கோயிலுக்கு உண்டான கடனை செலுத்தாதவர்கள் உடனடியாக கொடுத்துவிடுங்கள் அப்படி இல்லை என்றால் அடுத்த ஜென்மத்தில் வவ்வாலாகவோ , பெருச்சாளியாகவோ , மூஞ்சூறுவாகவோ பிறக்க நேரிடும். அதைப்போல சிவன் சொத்து குலநாசம் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். இவ்வாறு அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழிசூர்:உத்திரமேரூர் ஒன்றியம், அழிசூர் கிராமத்தில், ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதின வளாகத்தில் ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில், 10 நாட்கள் ... மேலும்
 
temple news
அழகர்கோவில் : மதுரை சித்திரைத்திருவிழாவில் முக்கிய நிகழ்வான வைகையாற்றில் கள்ளழகர் இறங்குவதற்காக ... மேலும்
 
temple news
பிரான்மலை: சிங்கம்புணரி அருகே பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயில் தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar