Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் இராப்பத்து ஒன்பதாம் ... நடராஜர் கோவிலில் சிதம்பர ரகசியம் திரை விலகி தரிசனம் கிடைக்குமா? நடராஜர் கோவிலில் சிதம்பர ரகசியம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவில் மஹா தீப மை பிரசாதம் பாக்கெட் செய்யும் பணி
எழுத்தின் அளவு:
அருணாசலேஸ்வரர் கோவில் மஹா தீப மை பிரசாதம் பாக்கெட் செய்யும் பணி

பதிவு செய்த நாள்

23 டிச
2021
10:12

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹா தீப கொப்பரையிலிருந்து சேகரிக்கப்பட்ட, மஹா தீப மை பிரசாதம்,  பக்தர்களுக்கு வினியோகிக்க, பாக்கெட் செய்யும் பணி நடந்து வருகிறது.

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவில்,  2,668 அடி உயர மலை உச்சியில் கடந்த நவ., 19ல்,  மஹா தீபம் ஏற்றப்பட்டது. இதற்காக, 3,500 கிலோ நெய், 1,000 மீட்டர் காடா துணி பயன்படுத்தி, ஐந்தரை அடி உயர கொப்பரையில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. 11 நாட்கள் தொடர்ந்து எரிந்த மஹா தீப கொப்பரையிலிருந்து  சேகரிக்கப்பட்ட, மஹா தீப மை பிரசாதம் கடந்த, 20ல், ஆருத்ரா தரிசனத்தன்று நடராஜருக்கு முதலில் சாத்தப்பட்டது. இதை தொடர்ந்து பக்தர்களுக்கு வினியோகம் செய்ய, மஹா தீப கொப்பரையிலிருந்து சேகரிக்கப்பட்ட  தீப மை உடன்,    வேம்பு இலை, கட்டை, தர்ப்பை,  மா இலை, மாங்குச்சி கட்டை, அருகம்புல் , வில்வ இலை, கரிகாலகட்டை உள்ளிட்ட பல்வேறு மூலிகைகள் சேர்த்து அதனுடன், சுவாமி அபி ேஷக  விபூதி, ஜவ்வாது, அரகஜா, ரவுசான் போன்றவை சேர்த்து மஹா தீப மை பிரசாதம் தயாரிக்கப்பட்டது.

பின்னர் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதை பக்தர்களுக்கு வினியோகம் செய்ய, பாக்கெட் செய்யும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தீப மை பிரசாதத்தை  பக்தர்கள் இடுவதால், ஏவல், பில்லி, சூனியம், போன்றவை தாக்காமல், காரிய சித்தி பலன் கிடைக்கிறது என்பது, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு, பத்து கிராம் கொண்ட தீப மை பிரசாதம், விபூதி, குங்குமம் பிரசாதம் அடங்கிய பாக்கெட் சேர்த்து  இலவசமாக வழங்கப்படும். மற்ற பக்தர்கள், பத்து ரூபாய் கட்டணம் செலுத்தி கோவில் நிர்வாகத்திடம் பெற்று கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில், 108 திவ்யதேசங்களில் 20வது தலமாகவும், 40 ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு அருகே, தத்தமங்கலம் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.கேரளா ... மேலும்
 
temple news
கோவை: மார்கழி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, கோவை, உக்கடம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி கோட்டைமேடு ஐயப்பன் கோயிலில் 10ம் ஆண்டு மண்டலபூஜை விழா முன்னிட்டு ஐயப்பன் சாமி ஊர்வலம் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அருட்கோட்டம் முருகன் கோவிலில் மகாலட்சுமி சிலையின் கண் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar