Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ... ஸ்ரீரங்கம் மார்கழி பாவை நோன்பு: 28ம் நாள் விழா ஸ்ரீரங்கம் மார்கழி பாவை நோன்பு: 28ம் ...
முதல் பக்கம் » செய்திகள்
வைகுண்ட ஏகாதசி விழா: சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி
எழுத்தின் அளவு:
வைகுண்ட ஏகாதசி விழா: சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி

பதிவு செய்த நாள்

12 ஜன
2022
12:01

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சுவாமி தரிசனம் செய்ய, பக்தர்களுக்கு அனுமதிக்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில், வைணவ ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவில் ஆகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும், வைகுண்ட ஏகாதசி, மாசிமக தேரோட்டம், புரட்டாசி மாதம் சனிக்கிழமை விழா ஆகிய விழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். கொரோனா பிரச்னையால் தமிழக அரசு வழிபாட்டு தலங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழாவில், சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு, அனுமதி அளிக்கப்படுமா என்ற சந்தேகம், மக்களிடையே எழுந்தது. இந்நிலையில் காரமடை அரங்கநாதர் கோவிலில், அதிகாரிகள், ஸ்தலதார், மிராசுதாரர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் அடங்கிய கூட்டம், நேற்று மாலை, 5:00 மணிக்கு நடந்தது. கோயில் செயல் அலுவலர் லோகநாதன் தலைமை வகித்தார். மேட்டுப்பாளையம் தாசில்தார் ரமேஷ், காரமடை நகராட்சி கமிஷனர் பால்ராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், வேத வியாச சுதர்சன பட்டர் உட்பட பலர் பங்கேற்றனர். வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, 13ஆம் தேதி காலை, 6:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். 16 லிருந்து, 18 ம் தேதி வரை பக்தர்களுக்கு கோவிலுக்கு வர அனுமதி இல்லை. வைகுண்ட ஏகாதசி விழா அன்று, சுவாமி வழிபட வரும் பக்தர்கள், கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கட்டாயம், 2 டேஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்று வைத்திருக்க வேண்டும். மேலும் சமூக இடைவெளியை விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். சுவாமி செல்லும் சொர்க்கவாசல் வீதி உட்பட நான்கு ரத வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 
மேலும் செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பஜனை மடத்தில் மார்கழி வழிபாடு நடக்கிறது. இங்குள்ள ... மேலும்
 
temple news
பந்தலூர்; பந்தலூர் அருகே நெல்லியாலம் சுற்று வட்டார பகுதிகளில், கடும் குளிரிலும் இளைஞர்கள் ராமர் பஜனை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர பந்தலில், சாணக்யா குரு சேனல் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நடந்து வரும் மார்கழி மாத ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகர், லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நடந்து வரும் மார்கழி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar