தஞ்சாக்கூரில் மண்டலாபிஷேகம் : முளைப்பாரி உற்சவ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜன 2022 10:01
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள தஞ்சாக்கூரில் உள்ள சுப்ரமணியர், ஜெயம் பெருமாள், திரிபுரசுந்தரி சமேத ஜெகதீஸ்வரர் கோயில்களில் மண்டலாபிஷேக விழா மற்றும் முளைப்பாரி உற்சவ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாக்கூரில் கடந்த 48 நாட்களுக்கு முன்பு சுப்ரமணியர்,ஜெயம் பெருமாள், திரிபுரசுந்தரி சமேத ஜெகதீஸ்வரர் கோயில்களில் கும்பாபிஷேக விழா நடைபெற்றதை தொடர்ந்து நேற்று முன்தினம் மண்டலாபிஷேக விழா மற்றும் முளைப்பாரி உற்சவ விழாவிற்காக சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும்,அலங்காரங்களும் செய்யப்பட்டிருந்தன. மேலும் கோயில் முன்பாக புனித நீர் அடங்கிய கலசங்கள் வைத்து யாகசாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து தஞ்சாக்கூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண் பக்தர்கள் முளைப்பாரி ஓடுகளை ஊர்வலமாக தூக்கிச்சென்று கோயில் முன்பாக உள்ள தெப்பக்குளத்தில் கரைத்தனர். அதனைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் பூஜாரி பாலசுப்பிரமணி செய்திருந்தார்.