சிதம்பரம்: தமிழ்நாடு திருநீலகண்டர் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சிதம்பரத்தில் திருநிலகண்டர் குருபூஜை விழா நடந்தது.
தமிழ்நாடு திருநீலகண்டர் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கம், அனைத்து குலாலர் மக்கள் இயக்கம் சார்பில் திருநீலகண்டர் குருபூஜை விழா நடந்தது. விழாவையொட்டி சிதம்பரம் போல் நாராயணன் பிள்ளை தெருவில் உள்ள குலாலர் மடத்தில் உள்ள திருநீலகண்ட விநாயகருக்கு காலை அபிஷேக ஆராதனையும் பின்பு திருநீலகண்டர் இளமைபெற்ற இளமையாக்கினார் குளத்தில் சிவன்- பார்வதி திருநீலகண்டர்- ரத்தின சேலை ஆகியோர்களுக்கு அபிஷேக ஆராதனையும் நடந்தது. குருபூஜை விழாவை கோவை மாவட்ட தலைவர் விஜயகுமார் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். டாக்டர் குப்புசாமி, மாநில தலைவர் சந்தானம் முன்னிலை வகித்தனர். விழா ஒருங்கிணைப்பாளர் ராஜா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சிதம்பரம் எம்.எல்.ஏ.,பாண்டியன் பங்கேற்றார். மயிலாடுதுறை மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், கடலூர் மாவட்ட செயலாளர் வடிவேல், இளைஞரணி சிவக்குமார் மற்றும் சிவதொண்டர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. மகளிர் அணி தலைவி ரேவதி நன்றி கூறினார்.