Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செஞ்சி மாரியம்மன் கோவில் 13ம் தேதி ... தேய்பிறை அஷ்டமி: ஏகாம்பரஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை! தேய்பிறை அஷ்டமி: ஏகாம்பரஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழையின்றி ஊரை காலி செய்த பெண்களுக்கு சீராட்டு: ஈரோட்டில் நூதன வழிபாடு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2012
10:07

மழையில்லாததால், கோபமடைந்து, ஊரை விட்டு வெளியேறிய பெண்களை, ஆண்கள் சாந்தமாக்கும், "சீராட்டு விழா ஈரோட்டில் நடந்தது. ஈரோடு மாவட்டத்தின் நீராதாரமாக விளங்கும் காவிரியாறும், அதன் துணை நதிகளான பவானி, நொய்யல், அமராவதி ஆகியவை வறண்ட குளமாக மாறியுள்ளன. மாவட்டத்தில் உள்ள, 2.5 லட்சம் ஏக்கர் நிலத்தில், எவ்வித பயிர் சாகுபடியும் செய்ய முடியாமலும், நாற்று பாவிய வயல்களில் இருந்து, நாற்றை பறித்து நட முடியாமலும், விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளனர். நிலத்தடி நீர்மட்டம், பல நூறு அடிகள் கீழே இறங்கியுள்ளதால், ஆழ்குழாய்களில் நீர் வற்றிப் போய் விட்டது.

பண்டைய பழக்கம்: இதுபோல், மழை பெய்யாத காலங்களில், ஊர் பெண்கள் அனைவரும் சேர்ந்து, கிராமத்துக் கோவிலில் அம்மனை வேண்டி நடத்தப்படும், "சீராட்டு வழிபாடு, கொங்கு மண்டலத்தில், பண்டைய கால வழக்கமாக உள்ளது. இந்த நடைமுறையைப் பின்பற்றி, ஈரோடு அருகே மூலப்பாளையம் பெண்கள், மழை வரம் வேண்டி, நூதனமான முறையில், "சீராட்டு வழிபாடு மேற்கொண்டனர். நேற்று முன்தினம் இரவு, மூலப்பாளையம் மாரியம்மன் கோவில் முன், ஏழை, பணக்காரர் மற்றும் வயது வித்தியாசமின்றி, 100க்கும் மேற்பட்ட பெண்கள் கூடினர். சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மாரியம்மனை வழிபட்டு, வீடு, வீடாக பானையை எடுத்துச் சென்று, கேழ்வரகு, கம்பு ஆகியவற்றை தானமாக பெற்றனர்.

அம்மனிடம் வேண்டுதல்: மீண்டும் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெண்கள், தானமாக பெற்ற தானியங்களைக் கொண்டு, உப்பில்லாமல் கூழ் காய்ச்சினர். அதை அம்மனுக்கு படைத்த பின், ஒவ்வொரு பெண்ணும், கோவிலுக்கு முன் மண்டியிட்டு, கையேந்தி கூழை வாங்கி உண்டனர். பின், மனம் உருக அம்மனை வேண்டிய பெண்கள், பல்வேறு குழுக்களாக பிரிந்து, மூலப்பாளையம் பிள்ளையார் கோவில், பஞ்சாயத்து அலுவலகம், கரூர் ரோடு ஆகிய இடங்களில், மழை வரம் வேண்டி, ஒப்பாரி வைத்து வழிபாடு நடத்தினர்.

ஊரை விட்டு வெளியே...: அதன் பிறகும் மழை பெய்யாததால், "மழையில்லாமல் வறண்டு போன ஊரில் வாழ மாட்டோம் என்றபடி, தங்கள் கணவரிடம் பொய்யாக கோபித்துக் கொண்ட குடும்பத் தலைவிகள், இரவு 11 மணியளவில், ஊரை விட்டு வெளியேறினர். சிறிது நேரம் கழித்து, ஊரில் உள்ள ஆண்கள் அனைவரும் திரண்டு, ஊருக்கு வெளியே பெண்கள் நின்றிருந்த பகுதிக்குச் சென்றனர். "மாரியம்மன் கண் திறந்ததால் மழை பெய்து விட்டது; ஊரில் வறட்சி நீங்கியது என, மனைவியரை சமாதானம் செய்து, வீட்டுக்கு அழைத்து வந்தனர். "சீராட்டு வழிபாடு என்றழைக்கப்படும் இந்த வழிபாட்டில், கிராம மக்கள் அனைவரும் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புட்குழி: திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவிலில் மாசி பிரம்மோத்சவத்தின் ஏழாவது நாளான இன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மங்களாசாசனம் செய்ய, சங்கரமடத்தின் மடாதிபதி ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் நடைபெற்றது. செஞ்சி சத்திரத்தெரு ... மேலும்
 
temple news
 புவனகிரி: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.புவனகிரியில், ... மேலும்
 
temple news
சென்னை; திருமலை, திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar