மங்கலதேவி கண்ணகி கோயிலில் தமிழக, --கேரள அதிகாரிகள் ஆய்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2022 06:04
கூடலூர்: நாளை சித்ரா பவுர்ணமியையொட்டி தேனிமாவட்டம் கூடலூர் அருகே விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் தமிழக-, கேரள அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.இக்கோயிலில் நாளை சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், கோயில் வளாகத்தில் சீரமைப்புப் பணிகள் மற்றும் கோயிலுக்குச் செல்லும் பாதை சீரமைப்பு உள்ளிட்டவை குறித்து இருமாநில அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தமிழக தரப்பில் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. கவுசல்யா, தாசில்தார் அர்ஜுனன், ரேஞ்சர் அருண்குமார், கேரள தரப்பில் இடுக்கி ஆர்.டி.ஓ. ஷாஜி, பீர்மேடு தாசில்தார் விஜயலால் பங்கேற்றனர். கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த 2 ஆண்டுகளாக விழா நடைபெறாததால் நாளை நடைபெறும் விழாவில் தமிழக, -கேரள பக்தர்கள் அதிகம் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.