Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தேசம்மாள் கோவிலில் குவிந்த ... ராமநாதீஸ்வரர் கோவிலில் 108 பால்குட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பண்ணாரி மாரியம்மன் கோவிலில் மேம்பாட்டு பணி ஜரூர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2012
10:07

ஈரோடு : பண்ணாரி மாரியம்மன் கோவிலில், பக்தர்களின் வசதிக்காக, பல லட்சம் ரூபாய் மதிப்பில் மேம்பாட்டு பணி மும்முரமாக நடக்கிறது.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள, பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டித் தரும் கோவில்களில், பண்ணாரி மாரியம்மன் கோவிலும் ஒன்று.தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து, செவ்வாய், வெள்ளி, அமாவாசை மற்றும் முக்கிய விசேஷ நாட்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர். பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தை அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை நடக்கும் குண்டம் பூக்குழி திருவிழாவில், பல லட்சம் பக்தர்கள் குண்டம் இறங்குவர்.பண்ணாரி மாரியம்மன் கோவிலில், பக்தர்களின் வசதிக்காக, கோவில் நிதி, பக்தர்கள் காணிக்கை ஆகியவற்றைக் கொண்டு, பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன. கோவில் மண்டபத்தில், அம்மனின் திருவுருவச் சிற்பங்கள் பொறிக்கும் பணி நடந்து வருகிறது.இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:அறநிலையத்துறையில் ஒதுக்கப்பட்ட நிதி, மக்கள் காணிக்கை, உண்டியல் நிதி ஆகியவற்றின் மூலம், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, குடிநீர் வசதி, ஓய்வெடுக்க மண்டபங்கள் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது.ஸ்வாமி தரிசனம் செய்த பக்தர்கள் ஓய்வெடுக்க கட்டப்பட்ட மண்டபத்தில், அம்மனின் வண்ணச் சிலைகளை பொறிக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, கோவில் மண்டபத்தின் மேற்புறத்தில் அம்மனின் பல அவதாரங்களை விளக்கும் சிலைகள் வடிவமைக்கப் படுகின்றன. ஓரிரு மாதத்தில் பணிகள் நிறைவடையும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar