Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நயினார்கோவில் நாகநாதசுவாமி ... ரமலான் சிந்தனைகள்6:  தாயின் காலடியில் சொர்க்கம்! ரமலான் சிந்தனைகள்6: தாயின் காலடியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் கிறிஸ்துவ மத பிரசாரம் தேவஸ்தான ஊழியர்கள் மீது நடவடிக்கை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2012
11:07

நகரி : திருமலையில் சட்டவிரோதமாக, கிறிஸ்துவ மத பிரசாரத்தில் ஈடுபட்ட திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் மூவர் மீது, தேவஸ்தான அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். திருப்பதி தேவஸ்தான சுகாதாரத் துறையில், துப்புரவு தொழிலாளியாக பணியாற்றும் ஈஸ்வரய்யா, கிருஷ்ணம்மாள், யசோதம்மாள் ஆகிய மூவரும் திருமலையில் உள்ள புதிய, "எப் டைப் விடுதிகளில் வசித்து வருகின்றனர். இவர்கள், கிறிஸ்துவர மத பிரசாரம் செய்து வருவதாக, தேவஸ்தான கூடுதல் முதன்மை விஜிலென்ஸ் அதிகாரி சிவகுமார் ரெட்டிக்கு கடந்த, 18ம் புகார் வந்தது. இதுபற்றி உடனடியாக விசாரணை நடத்தி, அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. திடீர் சோதனை துப்புரவு தொழிலாளர்கள் குடியிருக்கும் விடுதிகளில், விஜிலென்ஸ் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அந்த வீடுகளில் கிறிஸ்துவ மதம் தொடர்பான பிரசார போஸ்டர்கள், நோட்டீஸ்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. யசோதம்மாளிடம் விசாரணை நடத்தியதில், தனது குடும்ப உறுப்பினர்கள் மத பிரசாரம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு செயல்பட்டு வந்ததாக கூறினார். இதையடுத்து, தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரி சீனிவாச ராஜூ, மத பிரசாரத்தில் முக்கிய தொடர்புடையை துப்புரவு ஊழியர்கள் மூவரையும், உடனடியாக கீழ் திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாகத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். அவர்கள் குடியிருந்த வீடுகளையும் காலி செய்யவும் தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.பின்னர், திருமலையில் குடியிருக்கும் தேவஸ்தான ஊழியர்களின் வீடுகளிலும், விஜிலென்ஸ் அதிகாரிகள், பாதுகாப்பு போலீசாருடன் நேற்று முன் தினம் தீவிர சோதனையிட்டனர். எச்சரிக்கை திருப்பதி தேவஸ்தான போர்டு சேர்மன் பாபிராஜூ கூறுகையில், "தேவஸ்தான ஊழியர்களே, இது போன்ற செயல்களில் ஈடுபடுவர் என, நினைத்துக் கூட பார்க்கவில்லை. இச்செயல் சகித்து கொள்ள முடியாதது என்றார். தேவஸ்தான நிர்வாக அதிகாரி சுப்பிரமணியம், இதர மத பிரசாரத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர் ; கங்கைகொண்ட சோழபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோயில் அன்னாபிஷேக விழாவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த  அன்னாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருவாரூர்: திருவாரூர் விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமி முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே சமயபுரம்  பகுதியில் வைத்தியபுரி ஸ்ரீ மகா சித்தர் பீடத்தில் ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்: கார்த்திகை பூர்ணிமாவை முன்னிட்டு, வாரணாசியில் கங்கை நதியில் புனித நீராட ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar