Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
2 ஆண்டுகளுக்கு பிறகு கொப்புடையநாயகி ... பத்ரகாளியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் திருவிழா பத்ரகாளியம்மன் கோயிலில் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரையில் சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
மானாமதுரையில் சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

10 மே
2022
04:05

மானாமதுரை: மானாமதுரையில் சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழாவில் ஏராளமான கர்நாடக இசைக் கலைஞர்கள் பங்கேற்று இசை அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கர்நாடக இசைக் கலைஞர்களின் குருவாக போற்றப்படும் சதாசிவ பிரம்மேந்திராள் மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலிலுள்ள  சோமநாதர் சன்னதிக்கு பின்புறம் உள்ள சன்னதியிலும்,கரூர் அருகே உள்ள நெரூர்,காசி,ஓம்கார்,பாகிஸ்தானில் உள்ள கராச்சி உள்ளிட்ட 5 இடங்களில் ஒரே நேரத்தில் ஜோதி ரூபமாக ஜீவசமாதி அடைந்துள்ளார்.இதனை கொண்டாடும் விதத்தில் வருடந்தோறும் மேற்பட்ட 5 இடங்களிலும் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 2 வருட காலமாக கொரோனா தொற்று காரணமாக மானாமதுரையில் ஆராதனை விழா நடைபெறாத நிலையில் இந்தாண்டு ஆராதனை விழா நேற்று மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் திருமண மஹாலில் துவங்கியது. காலை 8:00 மணிக்கு சதாசிவ பிரம்மேந்திராள் உருவப்படத்திற்கு ஆராதனை கமிட்டியினர் மற்றும் ஏராளமான கர்நாடக இசைக் கலைஞர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட கர்நாடக இசைக் கலைஞர்கள் பங்கேற்ற வாய்ப்பாட்டு, வயலின்,வீணை,புல்லாங்குழல், மாண்டலின் இசைக் கச்சேரிகளும் மாலை பாராட்டு விழாவும் நடைபெற்றது.இன்று காலை 7:00 மணியிலிருந்து ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் பூஜை உஞ்சவிருத்தி,குரு அஞ்சலி,கோஷ்டி கானம், வடுக பூஜை,கன்யா பூஜை சொற்பொழிவு மற்றும் பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.இதற்கான ஏற்பாடுகளை சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை கமிட்டி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
சிவனின் சக்திகளில் ஒன்றான பைரவர் பிறந்த தினமே காலபைரவாஷ்டமி. இந்நாளில் அஷ்ட லட்சுமியரும் பைரவரை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலை அடிவாரத்தில் வீர விநாயகர் மற்றும் பால ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar