Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூலக்கல் மாரியம்மன் தேர்த்திருவிழா ... திருப்பரங்குன்றத்தில் 2 ஆண்டுகளுக்கு பின்பு பால்குட திருவிழா திருப்பரங்குன்றத்தில் 2 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
25 கோவில்களில் ரூ. 63 கோடியில் கும்பாபிஷேகம் : அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்
எழுத்தின் அளவு:
25 கோவில்களில் ரூ. 63 கோடியில் கும்பாபிஷேகம் : அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்

பதிவு செய்த நாள்

24 மே
2022
03:05

தொண்டாமுத்துார்;கோவை மாவட்டத்தில், 25 கோவில்களில், 63 கோடி ரூபாய் மதிப்பில் கும்பாபிஷேகம் நடத்தப்படும், என, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். கோவிலுக்கு வரும், வயது முதிர்ந்தவர்கள், மாற்றுதிறனாளிகள் வசதிக்காக, கோவில் பிரகாரத்தை சுற்றி வரும் வகையில், பேட்டரி கார் இயக்கத்தை துவக்கி வைத்தார்.

பின் நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:பட்டீஸ்வரர் கோவிலில், 2010ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது, 12 ஆண்டுகள் முடிவடைந்ததால், உடனடியாக திருப்பணி மற்றும் குடமுழுக்கு செய்ய, ஆறு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒன்பது உப கோவில்களில், திருப்பணிகளை மேற்கொள்ள, 12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள, 25 கோவில்களில், 63 கோடி ரூபாய் செலவில், திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், அடுத்த மாத இறுதிக்குள், லிப்ட் அமைக்கும் பணி துவங்கப்படும். வெள்ளியங்கிரி மலை ஏறியது, புதிய அனுபவம். அதிக காற்று, அதிக குளிர், அதோடு, செங்குத்தாக அமைந்திருக்கும் மலை. பக்தர்கள் ஏறுவதற்கு சில இடங்களில் கடினமான சூழ்நிலை உள்ளது. பழநி இடும்பன் மலை மற்றும் கோவை அனுவாவி சுப்பிரமணியர் சுவாமி கோவிலுக்கும், ரோப்கார் அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான சாத்தியக்கூறுகள் அறிக்கை பெறப்பட்டுள்ளது.கடந்தாண்டு, 662 கோடி ரூபாய், கோவில் திருப்பணிகளுக்காக ஒதுக்கப்பட்டு பணி நடந்து வருகிறது. இந்தாண்டு, 1,000 கோடி ரூபாய் மதிப்பில், 1,500 கோவில்களில் திருப்பணி மேற்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 
temple news
ஜம்மு: புனித அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் முதல் குழு புறப்பட்டு சென்றது. பயங்கரவாதிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar