Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரம்ஜான் சிந்தனைகள் - 14 தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் ஆடித்திருவிழா தேரோட்டம் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடித் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 ஆக
2012
11:08

அழகர்கோவில்: அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடிப் பவுர்ணமியை முன்னிட்டு நடந்த தேரோட்டத்தில்  ஏராளமான பக்தர்கள், "கோவிந்தா கோஷம் முழங்க வடம் பிடித்து தேரை இழுத்தனர். இக்கோயிலில் ஆடித் திருவிழா ஜூலை 25ல் துவங்கியது. விழா நாட்களில் தினமும் காலை தங்கப் பல்லக்கிலும், இரவில் முறையே சிம்மம், அனுமார், பூச்சப்பரம், கருடன், யானை, சேஷ வாகனங்களில் எழுந்தருளிய பெருமாள் கோயிலை வலம்
வந்தார். முக்கிய நிகழ்வாக நேற்று தேரோட்டம் நடந்தது. அதிகாலை சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூமா தேவியருடன் தேரில்  எழுந்தருளினார். அங்கு சர்வ அலங்காரங்கள் முடிந்து, தீப ஆராதனைகள் நடந்தன. காலை 9.15 மணிக்கு தக்கார் வெங்கடாஜலம், துணை கமிஷனர் செல்வராஜ் தலைமையில் நாட்டார்கள் தேருக்கு தேங்காய் உடைத்து பூஜை செய்தனர். பின் 9.20 மணிக்கு  "கோவிந்தா கோஷம் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆடி, அசைந்து புறப்பட்ட தேர், காலை 10.45 மணிக்கு நிலைக்கு திரும்பியது. இரவு பூப்பல்லக்கில் புறப்பட்ட பெருமாள் தேரோடும் பாதையில் எழுந்தருளினார். இந்தாண்டு தேரோடும் பாதைகள் ரூ.1.75 கோடியில் கான்கிரீட்டால் அமைக்கப்பட்டன. ரூ.20 லட்சத்தில் தேருக்கு ஹைட்ராலிக்
சக்கரங்கள் பொருத்தப்பட்டன. இதனால் பக்தர்கள் சுலபமாக தேரை இழுத்தனர். இன்று(ஆக., 3) காலை உற்சவ சாந்தி நடக்கிறது. நாளை(ஆக., 4) சாற்று முறையுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை தக்கார், துணை கமிஷனர் தலைமையில் பேஸ்கார்கள் கணேசன், சேது, மனோகரன் மற்றும் பணியாளர்கள் செய்தனர். வெளியிடங்களிலிருந்து கூடுதல் பஸ் வசதி செய்யப்பட்டது. டி.எஸ்.பி., அருள் அமரன் தலைமையில் ஏராளமான போலீசார் மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
சிவகாசி; சிவகாசி அருகே திருத்தங்கலில் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்சவ திருவிழாவை ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆனி மாதம் திருவோண விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
சபரிமலை; நவக்கிரக பிரதிஷ்டைக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. நாளை காலை 11:30 மணிக்கு நவக்கிரக ... மேலும்
 
temple news
காரைக்குடி; சாக்கோட்டையில் உள்ள சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar