Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் ... மாகாளியம்மனுக்கு பெண்கள் மாவிளக்கு, தீர்த்தக் காவடி எடுத்து தரிசனம் மாகாளியம்மனுக்கு பெண்கள் மாவிளக்கு, ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள் மீட்பு
எழுத்தின் அளவு:
வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள் மீட்பு

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2022
09:06

அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு கடத்தப்பட்ட தமிழக கோவில்களைச் சேர்ந்த 10 புராதன சிலைகள் மீட்கப்பட்டு, தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்டு, வெளிநாடுகளுக்கு விற்கப்பட்ட புராதன சிலைகள் குறித்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சிலை கடத்தல் தடுப்பு போலீசாரால் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தீவிர விசாரணைக்குப் பின், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் அருங்காட்சியகங்களில் இருந்து, 10 உலோக மற்றும் கற்சிலைகள், டில்லியில் உள்ள மத்திய தொல்பொருள் துறை வசம், ஒப்படைக்கப்பட்டன.

இவ்வாறு மீட்கப்பட்ட தமிழக கோவில் சிலைகளை, தமிழக அரசிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, டில்லியில் நடைபெற்றது. மத்திய கலாசாரதுறை அமைச்சர் கிஷன் ரெட்டி, இந்த சிலைகளை தமிழக டி.ஜி.பி., சைலேந்திரபாபுவிடம், ஒப்படைத்தார்.கலாசாரத் துறை இணையமைச்சர் அர்ஜுன்ராம் மெஹ்வால், மத்திய மீன்வளத்துறை இணையமைச்சர் முருகன் ஆகியோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சிக்குப் பின், சைலேந்திரபாபு கூறியதாவது: தமிழக கோவில்களைச் சேர்ந்த 138 சிலைகள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், தற்போது, மேலும் 10 சிலைகள் மீட்கப்பட்டு உள்ளன. இவை மிகவும் பழமைவாய்ந்த, முக்கியத்துவம் வாய்ந்த சிலைகள். இன்னும் சில சிலைகள் வெளிநாட்டில் உள்ளன.அவை, உலகின் எந்த மூலையில் இருந்தாலும், விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள், மொத்தம் எவ்வளவு என்ற துல்லியமான விபரம் இல்லை என்றாலும், படிப்படியாக விசாரணை நடத்தி அவை மீட்கப்படும்.தமிழக கோவில்களில், தற்போது இருக்கும் சிலைகளை பாதுகாக்கவும், எதிர்கால தலைமுறையினர், அறிந்து கொள்ளவும், டிஜிட்டல் முறையில் அவைகளை பதிவு செய்து பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். - நமது டில்லி நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை, அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையாருக்கு ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தை அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; கன்னட இசையின் முன்னோடியான புரந்தர தாசரின் மூன்று நாள் ஆராதனைப் பெருவிழா, திருமலை திருப்பதி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவிற்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவிளையாட்டம் அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் மாணிக்கவாசகர்  உலோக சிலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar