கடலுார் திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூன் 2022 09:06
கடலுார், கடலுார், கரையேறவிட்டகுப்பம் திரவுபதியம்மன் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கடலுார், பழைய வண்டிப்பாளையம் கரையேறவிட்டகுப்பத்தில் திரவுபதியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தீ மிதி உற்சவம் கடந்த மாதம் 31ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாண உற்சவம் இரவு 7:00 மணியளவில் அம்மன் திருக்கல்யாண வைபவம், தொடர்ந்து, திருக்கல்யாண பரிவேட்டை நடந்தது. இரவு கிருஷ்ணர் வீதியுலா நடந்தது.