அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் அடுத்த வெள்ளிரவெளி ஊராட்சியில் புகழ் பெற்ற அருள்மிகு ஸ்ரீ கரிய காளியம்மன் கோவில் உள்ளது. கோவிலின் 11 ம் ஆண்டு குண்டம் மற்றும் திருத்தேர் விழா கடந்த 1ம் தேதி பூச்சாட்டுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, நேற்று 16 ந் தேதி குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 4.00 மணிக்கு பாரியூர் அம்மனை அழைத்து வருதல், தொடர்ந்து, 5.30 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனை தர்சித்தனர். தொடர்ந்து, அம்மனுக்கு பொங்கல் வைத்து குண்டம் நிறை செய்தனர். 7.00 மணிக்கு முப்பாட்டு பொங்கல் வைத்து, அக்னி அபிஷேக பூஜை நடைபெற்றது. 10.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல். உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று 17 ந் தேதி மாலை 4.00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், நாளை 18 ந் தேதி இரவு 8.00 மணிக்கு அம்மன் முத்து பல்லக்கில் திருவீதி உலா வருதல், 20 ந் தேதி மாலை 6.00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொது செய்து வருகின்றனர்.