பழநி: பழநி மலைக்கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4 கோடியே 30 லட்சம் கிடைத்துள்ளது.
பழநியில் மலைக்கோயிலில் ஜூன். 14, 15,16 மூன்று நாட்கள் உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. இதில் நேற்று (ஜூன் 16ல்) காணிக்கையாக 310 கிராம் தங்கமும், 3 ஆயிரத்து 122 கிராம் வெள்ளியும் கிடைத்தது. மேலும் ரூ. ஒரு கோடியே 52 லட்சத்து 59 ஆயிரத்து 820, மற்றும் 167 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. மூன்று நாட்கள் உண்டியல் எண்ணிக்கையில் காணிக்கையாக 1954 கிராம் தங்கமும், 25 ஆயிரத்து 939 கிராம் வெள்ளியும் கிடைத்தது. மேலும் ரூ. 4 கோடியே 93 லட்சத்து ஆயிரத்து 385, மற்றும் 560 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணிக்கையில் இணை ஆணையர் நடராஜன், அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இன்றும் மலைக்கோயிலில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற உள்ளது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.