Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பொங்கல் திருவிழா இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தருமபுரம் ஆதீனம் சிவசைலத்திற்கு ஞானரத யாத்திரை
எழுத்தின் அளவு:
தருமபுரம் ஆதீனம் சிவசைலத்திற்கு ஞானரத யாத்திரை

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2022
10:06

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் சொக்கநாதப் பெருமான் உடன் சிவசைலத்திற்கு தட்சிண ஞான ரத யாத்திரை புறப்பட்டு சென்றார்.

தென்காசி மாவட்டம் சிவசைலம் சிவசைல நாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வரும் 23ஆம் தேதி நடைபெறுகிறது. அதில் பங்கேற்பதற்காக தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேற்று காலை தருமை ஆதீனத்தில் இருந்து பூஜா மூர்த்தியான சொக்கநாதப் பெருமானுடன், தட்சிண ஞானரத யாத்திரையைத் தொடங்கினார். அதனையொட்டி இன்று பூஜை மடத்தில் சொக்கநாத பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து 27வது குருமகாசன்னிதானம் சொக்கநாதப் பெருமானை தனது தலையில் சுமந்து சென்று ஞான ரதத்தில் எழுந்தருள செய்து மகா தீபாராதனை நடத்தினார். தொடர்ந்து ஞானபுரீஸ்வரர், விநாயகர் கோவில்களில் ஞானத்திலிருந்து குருமகாசன்னிதானம் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு யாத்திரையைத் தொடங்கினார். இரவு திருநெல்வேலி கட்டளை மடத்திலும், 18ஆம் தேதி திருச்செந்தூர் கோவிலில் வழிபாட்டிற்குப் பின்னர் கட்டளை மடத்தில் தங்குகிறார். 19ஆம் தேதி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் தரிசனம் செய்து, கட்டளை மடம் கட்டுமான பணிகளை பார்வையிடுகிறார். 20ஆம் தேதி சிவசைலம் கட்டளை மடத்திற்கு சென்றடைந்து கோவில் கும்பாபிஷேக முதல் கால யாகசாலை பூஜையை தொடங்கி வைத்து வழிபாடு நடத்துகிறார்‌. 23ஆம் தேதி காலை 9 மணிக்கு சிவசைலம் கோவில் கும்பாபிஷேக விழாவிலும், இரவு திருக்கல்யாண உற்சவத்திலும் கலந்து கொண்டு வழிபாடு நடத்துகிறார். 24ஆம் தேதி திருக்குறுங்குடி, சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தரிசனம் செய்கிறார். 25ஆம் தேதி அங்கிருந்து புறப்பட்டு மதுரை வழியாக இரவு தருமபுரம் வந்தடைகிறார். நிகழ்ச்சியில் ஆதீன தம்பிரான் சுவாமிகள், தலைமை கண்காணிப்பாளர் மணி, கல்லூரி முதல்வர் சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ... மேலும்
 
temple news
சூரியனின் அருளைப் பெற ஆவணி ஞாயிறு விரதம் சிறப்பானதாகும். இது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளாறு உலகப்புகழ் பெற்ற சனீஸ்வர பகவான் கோவிலில் ஆவணி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
விழுப்புரம்; பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ... மேலும்
 
temple news
நாகப்பட்டினம்; நாகையில்,63 நாயன்மார்களில் ஒருவரான,அதிபத்த நாயனாருக்கு சிவபெருமான், தேவியருடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar