Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news நடனபாதேஸ்வரர் கோவில் விழா ... திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி முருகன் கோவிலில் ஜனவரியில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பழநி முருகன் கோவிலில் ஜனவரியில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2022
06:07

சென்னை:பழநி, தண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம், அடுத்தாண்டு ஜன., மாதம் நடத்தப்படும், என, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை, நுங்கம்பாக்கம், ஹிந்து சமய அறநிலையத் துறை கமிஷனர் அலுவலகத்தில், இரண்டாம் நாள் சீராய்வு கூட்டம், அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடந்தது.
பின், அமைச்சர் அளித்த பேட்டி:சட்டசபையில் அறிவிக்கப்பட்ட, 277 அறிவிப்புகளின், 4,400 பணிகள் குறித்து, இரண்டு நாட்களாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், பழநி ஆண்டவர் கோவில் கல்லுாரியில் படிக்கும் மாணவ - மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.பக்தர்கள் அதிகம் வருகை தரும் 10 கோவில்களில், மருத்துவமனைகள் துவக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு புதிதாக, ஐந்து கோவில்களில் மருத்துவமனைகள் துவங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஐந்து கோவில்களில், நாள் முழுதும் பிரசாதம் வழங்கும் திட்டம் உடனடியாக துவக்கப்படும். அன்னதானத் திட்டம் மேலும், 10 கோவில்களில் துவக்கப்பட உள்ளது.திருநெல்வேலி, நெல்லையப்பர் கோவிலில் தினசரி, 500 பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் நாளை துவக்கப்படுகிறது. திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி, பட்டீஸ்வரர் கோவிலில் பேட்டரி கார் திட்டம் உள்ளது. அடுத்த மாதம் மீதமுள்ள, 11 கோவில்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். அடுத்த ஆண்டு ஜன., மாதம், பழநி தண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது என, முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிதாக ஆறு அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள், இசைப் பள்ளிகள் துவக்குவது குறித்து உத்தரவிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar