Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
28ம் நாள் ஆடிப்பெருக்கு: கிடா வெட்டி ... அரியலூர் அம்மன் கோவிலில் பால்குட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரிவலம் கோயிலில் 15ம் தேதி ஆவணித் தபசு திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஆக
2012
10:08

திருவேங்கடம்: கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாத சுவாமி கோயிலில் ஆவணித் தபசு திருவிழா வரும் 15ம் தேதி துவங்குகிறது.சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலின் துணை கோயிலான கரிவலம்வந்தநல்லூர் ஒப்பனையம்மாள் சமேத பால்வண்ணநாத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆவணித் தபசு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி 14 நாட்கள் நடப்பது வழக்கம். திருவிழாவில் தினமும் காலை சுவாமி, அம்பாள், சகல மூர்த்திகளுக்கும் அபிஷேக, அலங்கார, தீபாராதனை, இரவில் கிளி, ரிஷபம், மயில், யானை, காமதேனு போன்ற வாகன சப்பரத்தில் அம்பாள் திருவீதியுலாவும் நடைபெறும். 11ம் நாள் தேரோட்டமும், 13ம் நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாலையில் சுவாமி முகலிங்கநாதராகவும், இரவில் பால்வண்ணநாதராகவும் அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். ஆனால் தற்போது இக்கோயிலில் ராஜகோபுரம் திருப்பணி நடந்து வருவதால் சமய சிவாச்சாரியார் ஜானகிராமன் ஐயர் அறிக்கையை ஏற்று இவ்வாண்டும் சென்ற ஆண்டைப்போல் ஆவணித்தபசு திருவிழாவை கோயிலுக்கு உள்ளேயே உள் பூஜையுடன் நடத்த திட்டமிடப்பட்டு வரும் 15ம் தேதி முதல் 28ம் தேதி வரை 14 நாட்கள் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் மதியம் சுவாமி, அம்பாள், சகல மூர்த்திகளுக்கும் அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது. உள் பூஜையாக திருவிழா நடப்பதால் இத்திருவிழாவை முன்னிட்டு நடக்கும் தேரோட்டம் மற்றும் தபசுக்காட்சிகள் ஆகியன நடைபெறாது. விழா ஏற்பாடுகளை துணை ஆணையர் மற்றும் கூடுதல் பொறுப்பு செயல் அலுவலர் அன்புமணி, மண்டகப்படிதாரர்கள் கரிவலம்வந்தநல்லூர் துரைராஜ் சகோதரர் ராமகிருஷ்ணன், யாதவர் சமுதாயம், பிள்ளைமார் சமுதாயம், சென்னிகுளம் சுப்பாரெட்டியார், வணிக வைசிய சங்கம், சைவ செட்டியார் சங்கம், தேவர் சமுதாயம், விஸ்வபிரம்ம மகாசபை, குவளைக்கண்ணி தேவேந்திரகுல வேளாளளர் சங்கம், இந்து நாடார் சங்கம், கம்மவார் சமுதாயம், லிங்கப்பா உட்பட பல்வேறு சமுதாய மக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பாலை: மதுரை திருப்பாலை இஸ்கான் அமைப்பு சார்பில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
திருப்பூர்: ஆடி கிருத்திகையான நேற்று, வாலிபாளையம் ஸ்ரீகல்யாண சுப்பிரமணியர் கோவிலில் சிறப்பு அலங்கார ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, வல்லக்கோட்டை கிராமத்தில், 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த முருகன் கோவில் ... மேலும்
 
temple news
கோவை கொடிசியா வளாகம் அருகில் இஸ்கான் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு கிருஷ்ண ஜெயந்தி விழா, கோலாகலமாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ தர்ம சாஸ்தா பூஜா சங்கம் சார்பில், ஆர்.எஸ்.புரத்தில் ராதா கல்யாண மஹோத்ஸவம், பக்தர்கள் சூழ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar