காரியாபட்டி காரியாபட்டி ஆவியூரில் செல்லாயி அம்மன் கோயில் ஒரு வார திருவிழா ஆக. 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வாக பூக்குழி இறங்கி, முளைப்பாரி, பால்குடம் எடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர். ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.