மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே ஸ்ரீ ஐயனார் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை அருகே மேல மருதாந்தநல்லூர் கிராமத்தில் ஸ்ரீ பூர்ணா புஷ்களா சமேத ஐயனார் மற்றும் ஸ்ரீ வீரனார், சப்த கன்னி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 22 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை மற்றும் முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. இன்று நான்காம் கால யாகசாலை பூஜை முடிவுற்று பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை சென்றடைந்தவுடன் பூஜிக்கப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மங்கள வாத்தியம் இசைக்க கலசத்திற்கு ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.