பதிவு செய்த நாள்
24
ஆக
2022
04:08
கூடலுார் : கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் உள்ள சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் ஆதிசுஞ்சனகிரி மஹா சமஸ்தான மட பீடாதிபதி நிர்மலா நந்தநாத சுவாமி தலைமையில் நடந்தது.
கம்பம் எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன் வரவேற்றார். முதல் கால யாக பூஜையில் கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமமும், இரண்டாவது கால யாக பூஜையில் கனி, மூலிகை, வேள்வி, திருமுறை விண்ணப்பம், பேரொளி வழிபாடு உட்பட சிறப்பு பூஜைகளும் நடந்தது. 40 நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பூஜைகள் சதாசிவ குருக்கள் முன்னிலையில் நடந்தது. மகாலிங்கம் இன்ஸ்டிடியூட் ஆப் பாரா மெடிக்கல் கல்லூரிச் செயலாளர் ராமச்சந்திரா, ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ., மகாராஜன், கல்லூரி இணைச் செயலாளர் வசந்தன், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவிகள், பொது மக்கள் உட்பட ஏராளமோனார் பங்கேற்றனர்.