பதிவு செய்த நாள்
01
செப்
2022
06:09
பெரியகுளம்: பெரியகுளம் தாலுகா பகுதிகளில் கோயில்களில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விசேஷ பூஜைகள் நடந்தது.
பெரியகுளம் வரசித்தி விநாயகர் கோவிலில் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. குருவப்பபிள்ளையார், சங்கவிநாயகர் கோயிலில் கொழுக்கட்டை வைத்து சிறப்பு பூஜை நடந்தது. பஞ்சமூர்த்தி விநாயகர்: தேனி மாவட்டத்தில் ஒரே இடத்தில் ஐந்து முகத்தானாக வடுகபட்டியில் பஞ்சமூர்த்தி விநாயகர் கோயிலில் சித்தி கணபதி கையில் தேசிய கொடியும் தேசிய பூவான தாமரையும் இடம் பெற்றுள்ளது, மற்றும் உச்சிஸ்ட்ட கணபதி, வராக கணபதி, கிருஷ்டி கணபதி, ஏகசார கணபதி விசேஷ பூஜைகள் நடந்தது. முக்கரை விநாயகர், லட்சுமி விநாயகர், மற்றும் தாமரைக்குளம் லட்சுமிபுரம் ,தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, சில்வார்பட்டி, கைலாசபட்டி, மேல்மங்கலம் ஜெயமங்கலம் உட்பட தாலுகா முழுவதும் கோயிலில்கள், வீடுகள், அலுவலகம், வணிக நிறுவனங்களில் விநாயகர் சதுர்த்தி பூஜை நடந்தது.