மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் வெற்றிவிநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவில் சுவா மி சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மந்தாரக்குப்பம் கடை வீதியில் உள்ள வெற்றி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு அபிேஷக ஆரா தனை நடக்கிறது. இதையொட்டி, விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யபட்டு, சிறப்பு பூஜை நடந்து வருகிறது. நேற்று சுவாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம், அன்னதானம் மற்றும் திருவிளக்குபூஜை நடை பெற்றது. இன்று சுவாமிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. நாளை 1,008 கொழுக்கட்டையுடன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து மாலை 6:00 மணியளவில் மலர் அலங்காரத்தில் விநாயகர் வீதியுலா நடக்கிறது. தொடர்ந்து வடக்குவெள்ளுர் காசி விஸ்வ நாதர் கோவில் குளத்தில் விநாயகர் சிலை விஜர்சனம் செ ய்யப்படுகிறது. விழா ஏற்பாடுகளை இந்து முன்னணியினர் மற்றும் வெற்றி விநாயகர் சதுர்த்தி விழா க மிட்டியினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.