Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கடையூர் கோவிலில் 101 வயதை ... ராமலிங்கேஸ்வரர் கோவிலில் மஹாளய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிலில் மலைபோல் அகல் விளக்குதீபம் ஏற்றும் பக்தர்களுக்கு இடையூறு
எழுத்தின் அளவு:
கோவிலில் மலைபோல் அகல் விளக்குதீபம் ஏற்றும் பக்தர்களுக்கு இடையூறு

பதிவு செய்த நாள்

22 செப்
2022
02:09

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காந்தி சாலையில், மருகுவார்குழலி உடனுறை வழக்கறுத்தீஸ்வரர் மற்றும் பராசரேசர் கோவில் உள்ளது.

இக்கோவிலில், தொடர்ந்து 16 திங்கட்கிழமை 16 அகல் விளக்கேற்றி, சுவாமியை வலம் வந்து வழிபட்டால், தீராத வழக்குகளும் தீர்ந்து வெற்றி கிடைக்கும் என, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.இதனால், இக்கோவிலுக்கு திங்கட்கிழமையில் உள்ளூர்காரர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தீபம் ஏற்றி, சுவாமியை வழிபட்டு செல்கின்றனர்.

இக்கோவிலில் பக்தர்கள் விளக்கு ஏற்றுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில், ஏற்கனவே ஏற்றப்பட்டு காலியான அகல் விளக்குகள் அகற்றப்படாமல், மலை போல மூட்டை மூட்டையாக கட்டி போடப்பட்டுள்ளன.இதனால், தீபம் ஏற்றும் இடத்தில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், பக்தர்கள் ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், தீபம் ஏற்றுவதற்கு போதுமான இடம் இல்லாததால் நடந்து செல்லும் வழியில் தீபம் ஏற்றி விட்டு செல்கின்றனர். இதனால், ஆடைகளில் தீப்பற்றி தீ ஏற்படும் சூழல் உள்ளது.தீபம் ஏற்றும் இடத்தில் பக்தர்களுக்கு இடையூறாக, மலைபோல குவிந்துள்ள காலி அகல் விளக்குகளை அகற்ற, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே  பஞ்ச குரு ஸ்தலங்களில் ஒன்றான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருஞ்சேரி ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
சாணார்பட்டி: - கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடந்த வளர்பிறை பஞ்சமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar