Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news வடபழநி ஆண்டவர் கோவிலில் ‘சக்தி ... சிதம்பரம் நடராஜர் கோவிலில் நவராத்திரி விழா துவக்கம்: பிரம்மாண்ட கொலு சிதம்பரம் நடராஜர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் நவராத்திரி விழா துவங்கியது: அரோகர கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பழநியில் நவராத்திரி விழா துவங்கியது: அரோகர கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

27 செப்
2022
07:09

பழநி: பழநி, மலை கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா காப்புகட்டுதலுடன் துவங்கியது.

பழநி, மலைக்கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான கிழக்கு ரத வீதியில் உள்ள பெரிய நாயகி அம்மன் கோவிலில் நேற்று நவராத்திரி விழா துவங்கியது. இதில் முதல் நிகழ்ச்சியாக சுவாமிகளுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலையில் பெரிய நாயகி அம்மன் கோயிலில் மூலவர்,மயில் வாகனம், கோயில் யானை கஸ்தூரிக்கு காப்பு கட்டப்பட்டது. திருஆவினன்குடி சுவாமிக்கு காப்பு கட்டினர். மலைக்கோயிலில் உச்சிக்கால பூஜைக்கு பின் மூலவர், சண்முகர், வள்ளி, தேவயானை, துவாரபாலகர், மயில் வாகனம், நவவீரர்கள் ஆகியவற்றிற்கு அமிர்தலிங்கம் குருக்கள், செல்வசுப்ரமண்ய குருக்கள் காப்பு கட்டினர். அக்., 4ல் மலைக்கோயிலில் பகல் 1:30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். பராசத்தி வேல் புறப்பட்டு மலைக்கோயில் சன்னதி திருக்காப்பிடப்படும். பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து வேலுடன் தங்க குதிரை வாகனத்தில் முத்துகுமாரசுவாமி எழுந்தருளி கோதைமங்கலத்தில் அம்பு போடுதல் நிகழ்வில் சூரன் வதம் நடைபெறும். அதன்பின் பராசக்தி வேல் மலைக்கோயில் அடைந்த பின் அர்த்த சாம பூஜை நடைபெறும். நிகழ்ச்சி ஏற்பாடுகள் இணை ஆணையர் நடராஜன் தலைமையில் நடைபெறும். நவராத்திரி விழாவில் மாலை 6:00 மணிக்கு பெரிய நாயகி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும். விழாவில், பக்தி இசை, சொற்பொழிவு, நாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி: பழநி தைப்பூசத்தையொட்டி பழநிக்கு பாதயாத்திரையாக செல்லும் நகரத்தார் காவடிகள் நேற்று ... மேலும்
 
temple news
மறைமலை நகர்: பிளாஸ்டிக் குப்பை நிறைந்து அசுத்தமாக உள்ள, சிங்கபெருமாள் கோவில் சுத்த புஷ்கரணி குளத்தை ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை மாத வளர்பிறை சஷ்டி பூஜை விழா ... மேலும்
 
temple news
திருப்பூர்: அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளிட்ட முருகர் கோவில்களில், தைப்பூச ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உ.அம்மாபட்டி மூங்கில் அன்னை காமாட்சியம்மன் கோயில் ராஜகோபுரம் திருப்பணிகள் துவக்க விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar