Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி பிரம்மோற்சவம் 2ம் நாளில் ... மலர் அலங்காரத்தில் அம்மன் தசரா விழாவில் பக்தர்கள் வழிபாடு மலர் அலங்காரத்தில் அம்மன் தசரா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழநி கோவில் ‘சக்தி கொலு: குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
வடபழநி கோவில் ‘சக்தி கொலு: குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

29 செப்
2022
10:09

சென்னை, வடபழநி ஆண்டவர் கோவிலில் தமிழக கலாசாரம், பாரம்பரியம், வாழ்க்கை தத்துவம் ஆகியவற்றை விளக்கும் சக்தி கொலு மூன்றாம் நாள் விழாவை, கோவில் பெண் பணியாளர்கள் மற்றும் தரிசிக்க வந்த பக்தர்களால் குத்துவிளக்கேற்றி துவக்கப்பட்டது. சென்னை நகரில் பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்று, வடபழநி ஆண்டவர் கோவில். நவராத்திரி விழா முன்னிட்டு, சக்தி கொலு எனும் பெயரில் கொலு வைக்கப்பட்டு உள்ளது.ஹிந்து மதத்தில் பல விஷயங்கள், வழக்கங்கள், தெய்வங்கள் பல ரூபங்களில் உள்ளன.

இது போன்ற விஷயங்களை பக்தர்களுக்கு விளக்கும் நோக்கத்தில், பொம்மைகள் மற்றும் காட்சிகள் பற்றிய தகவல்கள், சக்தி கொலுவில் தெரிவிக்கப்பட்டுள்ளன.கொலுவில் உள்ள பொம்மைகளை பார்க்க வரும் பக்தர்கள், இதில் எழுதப்பட்ட தகவல்களை படித்து, அறிந்து கொள்ள முடியும்.அனைவரும் எளிதாக தெரிந்து கொள்ள சில அரிதான காட்சி பொம்மைகள் எந்த வரிசையில், எந்த படியில் இருக்கிறது என்ற விபரம், தமிழக முருகர் கோவில்கள் விபரமும் தனித் தகவலாக அளிக்கப்பட்டுள்ளன.நவராத்திரியின் மூன்றாம் நாளான நேற்று, காலை மற்றும் மாலையில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.

மாலை லலிதா சகஸ்ரநாம பாராயணம், வேத பாராயணம், ஸ்ரீ ருத்ரம், சமஹம், ஸ்ரீ சுக்தம் நடந்தது.நேற்று மாலை, அம்மனுக்கு அன்னபூரணி அலங்காரம் செய்யப்பட்டது. கோவில் பெண் பணியாளர்கள், தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் மூன்றாம் நாள் சக்தி கொலுவை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.பின், பக்தர்களின் கொலு பாட்டு நடந்தது. இரவு, ஸ்ரீகாந்த் பாகவதர் மற்றும் குழுவினரின் இசைக்கச்சேரி நடந்தது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சக்தி கொலு நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அதியமான்கோட்டை; அதியமான்கோட்டை தட்ஷிணகாசி காலபைரவர் கோவிலில் காலாஷ்டமி விழா சிறப்பாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; அயோத்தி ஸ்ரீராம் மடம் சார்பில் ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ரூ. 39 லட்சம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கண்ணுகோட்டு பகவதி அம்மன் கோவில் ஆறாட்டு உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றன.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஐதராபாத்தில் இருந்து பக்தர்கள் குழுவினருடன் வந்த பைரவன் என்ற நாய் சபரிமலை சன்னிதானத்தில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி; அரவிந்தர் மகா சமாதி தின அறை தரிசன நிகழ்ச்சி மழை காரணமாக வரும் ஒன்பதாம் தேதிக்கு தள்ளி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2023 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar