Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரியில் மார்கழி பிறப்பு ... மலர்ந்தது மார்கழி: குளிர்ந்த காற்று, வண்ண கோலம் மக்கள் உற்சாகம் மலர்ந்தது மார்கழி: குளிர்ந்த காற்று, ...
முதல் பக்கம் » சிறப்பு செய்திகள்
நாளை மார்கழி மாதம் பிறப்பு : திருச்செந்துார் கோவில் பூஜை நேரங்களில் மாற்றம்
எழுத்தின் அளவு:
நாளை மார்கழி மாதம் பிறப்பு : திருச்செந்துார் கோவில் பூஜை நேரங்களில் மாற்றம்

பதிவு செய்த நாள்

15 டிச
2022
11:12

திருச்செந்துார்: தமிழ் மாதம் மார்கழி பிறப்பை முன்னிட்டு, திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை (16ம் தேதி) முதல் பூஜை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கோவில் இணை ஆணையர் கார்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  தமிழ் மாதங்களில், தெய்வீக மாதமாக மார்கழி கருதப்படுகிறது. வழிபாட்டிற்கு உகந்தமாதமாக மார்கழி மாதம் உள்ளது. மார்கழி மாதபிறப்பை முன்னிட்டு, நாளை( 16ம்தேதி ) முதல் , திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் பூஜை காலங்கள் மாற்றப்படுகிறது. நாளை முதல் அதிகாலை 3:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, 3:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 4:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனை நடக்கிறது. அதிகாலை 5:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, காலை 7:30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், 8:45 மணிக்கு உச்சிகால தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் மாலை 3:30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6:00 மணிக்கு ராக்கால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.

இரவு 7:30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8:00 மணிக்கு பள்ளியறை தீபாராதனை நடக்கிறது. பின்னர் கோவில் நடை திருக்காப்பிடப்படும். இந்த பூஜை கால மாற்றம் ஜன., 14ம் தேதி வரைஅமலில் இருக்கும். ஆங்கிலபுத்தாண்டு தினமானஜன., 1ம் தேதி, அதிகாலை 1:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. ஆருத்திரா தரிசனத்தை முன்னிட்டு, ஜன., 6ம் தேதி மட்டும் கோவில் நடை அதிகாலை 2:00 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடக்கிறது. அதேபோல் , தைபொங்கல் தினத்தன்று (ஜன. , 15ம் தேதி ) கோவில் நடை அதி காலை 1 : 00 மணிக்கு திறக்கப்படுகிறது என, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 
மேலும் சிறப்பு செய்திகள் »
temple news
காரமடை; கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம் காரமடை அரங்கநாதர் கோவில். இங்கு வைகுண்ட ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம நம்பெருமாளுக்கு சாற்றுமுறை திருஷ்டி ஆரத்தி பூஜை நடைபெற்றது.ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசி விழா இராப்பத்து ஏழாம் நாளில், பரமபத வாசல் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், இன்று அதிகாலைசொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நம் பெருமாள் ... மேலும்
 
temple news
சென்னை : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், சொர்க்கவாசல் திறக்கப்பட்டதுசென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar