காளஹஸ்தி சிவன் கோயிலில் தெலுங்கு திரைப்பட இயக்குனர் பரசுராம் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2023 04:01
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயிலில் இன்று ஆங்கில புத்தாண்டையொட்டி அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்ததோடு நீண்ட வரிசையில் காத்திருந்து ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை தொடர்ந்து இன்று தெலுங்கு திரைப்பட இயக்குனர் ( கீதகோவிந்தம் ,சர்க்காரி வாரிப் பட்டா) போன்ற திரைப்படங்களை இயக்கிய பரசுராம் குடும்பத்தாரோடு சாமி தரிசனம் செய்ய வந்தவரை கோயில் அறங்காவலர் குழ உறுப்பினர்கள் மற்றும் கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்தனர். தொடர்ந்து கோயிலுக்குள் சென்றவர்கள் சாமி தரிசனம் செய்த பின்னர் கோயிலில் இருந்து வெளியில் வந்ததோடு அவர் சாமி தரிசனம் குறித்து பேசுகையில் ஒவ்வொரு ஆங்கிலப் புத்தாண்டு அன்று ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்து கொள்வது மிகுந்த சந்தோஷத்தையும் மன அமைதியையும் கொடுப்பதாகவும் அதே போல் இவ்வாண்டும் சாமி தரிசனம் செய்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில் தற்போது அக்கினேனி. நாக செய்தன்யாவுடன் ஒரு திரைப்படத்தை தொடங்கி இயக்கத்தில் உள்ளதாக தெரிவித்தார்.