Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விசாகப்பட்டித்திற்கு விஜய யாத்திரை விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மலைக்கோயில் படிப்பாதை, உப தெய்வ சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பழநி மலைக்கோயில் படிப்பாதை, உப தெய்வ சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

26 ஜன
2023
07:01

பழநி: பழநி, மலைக்கோயில் படிப்பாதை சன்னதிகள் உப தெய்வ சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பழநி, மலைக்கோயில், படிப்பாதை கோயில்களுக்கு (ஜன.26) இன்று காலை 5:30 மணிக்கு படிப்பாதை பாத விநாயகர் கோவில் முதலான உப தெய்வங்களுக்கு நிறைவு வேள்வி திருக்குட ஞானத் திருவுலா நடைபெற்றது. காலை 9:50 மணிக்கு மேல் 11:00 மணிக்குள் கிரி வீதியில் உள்ள மயில்கள், பாத விநாயகர் கோயில், படிப்பாதையில் உள்ள சேத்ரபாலர், சண்டிகாதேவி, விநாயகர், இடும்பன், கடம்பன், குராவடிவேலர், அகஸ்தியர், சிவகிரிஸ்வரர், வள்ளிநாயகி, கும்மினி வேலாயுத சுவாமி, சர்ப்ப விநாயகர், இரட்டை விநாயகர் உள்ளிட்ட உப தெய்வ சன்னதி‌ கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கந்தபுராணம் திருப்புகழ் முற்றோதல் நடைபெற்று ஆறாம் வேள்வி பூஜைகளான ஐந்திருக்கை, ஐந்து சுற்று பூஜை, தீ வளர்த்தல், சுள்ளிகுண்ட பூஜை, உருவேற்றல், விதை, வேர், இலை, தண்டு, பூ, காய், கனி, கிழங்கு, திரவியங்கள், அறுசுவை சாதம், பலகாரம், சுண்டல், பாயாசம், பால், தயிர், தேன், நெய், சமித்து 96 ஆகுதி, வேள்வி பட்டாடை ஆகுதி நிறைவேள்வி நடைபெற்றது. வேள்விச்சாலையில் காலை 8:00 மணிக்கு ஆறாம் கால வேள்வி நடைபெறும். நண்பகல் 12 மணிக்கு நிறைவேள்வி நடைபெறும். மாலை 5:30 மணிக்கு ஏழாம் கால வேள்வி, இரவு 8:30 மணிக்கு நிறை வேள்வியும் நடைபெறும். நாளை மறுநாள் (ஜன. 27) மலைகோயில் மூலவர் சன்னதிக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். நேற்று (ஜன.25) நான்காம் கால வேள்வி காலை 9:00 மணிக்கு துவங்கியது. நிறைவேள்வி காலை 12: 45 மணிக்கு நடந்தது. ஐந்தாம் கால வேள்வி மாலை 5:30 மணிக்கு நிறைவேள்வி 8:30 மணிக்கும் நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar