Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் ... கோவை வேங்கடாசலபதி கோயிலில் பூமி தாய் பூஜை கோவை வேங்கடாசலபதி கோயிலில் பூமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வள்ளலார் திருஅறை தரிசன விழா பக்தர்கள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:
வள்ளலார் திருஅறை தரிசன விழா பக்தர்கள் குவிந்தனர்

பதிவு செய்த நாள்

08 பிப்
2023
01:02

கடலுார் : வடலூர் அருகே மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் சித்தி வளாகத்தில் நேற்று நடந்த திருஅறை தரிசன விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கடலுார் மாவட்டம், வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை உள்ளது. இங்கு, 152ம் ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன விழா, கடந்த 5ம் தேதி நடந்தது. அன்றைய தினம் ஆறு முறை, ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று, வள்ளலார் சித்தி பெற்ற வடலுார் மேட்டுக்குப்பத்தில் திருஅறை தரிசனம் நடந்தது. அதையொட்டி, வடலுார் சத்திய ஞானசபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டி மலர்களால் அலங்கரித்து, அவரது உருவப் படத்துடன் வள்ளலார் நடந்து வந்த பாதை வழியே ஊர்வலமாக மேட்டுக்குப்பம் கொண்டு செல்லப்பட்டது. பார்வதிபுரம், கருங்குழி, மேட்டுக்குப்பம் கிராம மக்கள் வழிநெடுகிலும் பூக்கள் மற்றும் பழங்களுடன் வரவேற்றனர். வள்ளலார் சித்தி பெற்ற சித்தி வளாகத் திருமாளிகையில், அறை முன்பு வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அதனை தொடர்ந்து பகல் 12:00 மணியளவில் திரு அறை தரிசனம் தொடங்கி, மாலை 6:00 மணி வரை நடந்தது. இதில் பல்வேறு பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திரு அறை தரிசனம் செய்தனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பல இடங்களில் சன்மார்க்க சொற்பொழிவுகள் மற்றும் அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை சத்திய ஞானசபை அதிகாரிகள் மற்றும் மேட்டுகுப்பம் கிராம மக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று நடைபெற்ற ஆனி திருமஞ்சன தரிசன விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன திருவிழாவினையொட்டி நடராஜர், ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடந்தது.ஆதியும் ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா நடந்தது. இன்று காலை 4:00 ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் ஆனித்திருவிழாவை முன்னிட்டு கோயிலில் கம்பம் ஊன்றும் விழாவிற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar