பதிவு செய்த நாள்
28
பிப்
2026
02:02
பெ.நா.பாளையம்; உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷன் இயக்கத்தின் தலைவர் சுவாமி கவுதமானந்தர் ஆன்மிக சுற்றுப்பயணமாக பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்திற்கு இன்று வருகை தருகிறார்.
ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷன் இயக்கம் உலகமெங்கும், 100க்கும் மேற்பட்ட நாடுகளில் தங்கள் கிளைகளை நிறுவி, ஆயிரக்கணக்கான துறவிகள் வாயிலாக, கல்வி, மருத்துவம், பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை மக்களுக்கு ஆற்றி வருகிறது. இதன் உலகளாவிய தலைவராக சுவாமி கவுதமானந்தர் உள்ளார். இவர் பக்தர்களுக்கு ஆசி வழங்குவும், பல்வேறு நிகழ்ச்சிகளை கலந்து கொள்ளவும் பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்துக்கு இன்று வருகை தருகிறார்.
இன்று, 28ம் தேதி சனிக்கிழமை மதியம், 2:00 மணி அளவில் பெரியநாயக்கன்பாளையத்துக்கு வரும் சுவாமி கவுதமானந்தர் பிப்.,4ம் தேதி வரை வித்யாலயத்தில் தங்கி பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார். பிப்., 1ம் தேதி காலை மாற்றுத்திறனாளிகளுக்கான மராத்தான் போட்டியை தொடக்கி வைக்கிறார். பிப்., 2ம் தேதி வித்யாலயா வளாகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நட்சத்திர வனத்தையும் திறந்து வைக்க உள்ளார். மாலை, 6:00 மணி அளவில் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயாவில் உள்ள ராமகிருஷ்ணர் திருக்கோயிலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். தினமும் மாலை, 5:00 மணி அளவில் பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார். இவரது வருகையை ஒட்டி ராமகிருஷ்ண இயக்கத்தின் மூத்த துறவிகளும், கோவை வந்துள்ளனர்.