கச்சத்தீவில் கொடி ஏற்றத்துடன் விழா துவங்கியது : 3741இந்திய பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28பிப் 2026 02:02
ராமேஸ்வரம்; இலங்கை கச்சத்தீவு அந்தோனியார் சர்ச்சில் கொடி ஏற்றத்துடன் திருவிழா துவங்கியது. ராமேஸ்வரத்தில் இருந்து படகில் 3741 பக்தர்கள் சென்றனர்.
இலங்கையில் உள்ள கச்சத்தீவு அந்தோனியார் சர்ச் திருவிழாவுக்கு நேற்று காலை ராமேஸ்வரத்தில் இருந்து 118 படகில் 2817 ஆண்கள், 747 பெண்கள், 177 குழந்தைகள் ஆகமொத்தம் 3741 பக்தர்கள் கச்சத்தீவு சென்றனர். பக்தர்களை கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் காலோன், டி.ஆர்.ஓ., சங்கரநாராயணன், ராமேஸ்வரம் ஏ.எஸ்.பிக்ஷ, மீரா ஆகியோர் வழியனுப்பினர். சுங்கத்துறை, தமிழக போலீசார் மற்றும் நடுக்கடலில் இந்திய கடற்படை, கடலோர காவல்படையினர் பக்தர்களை தீவிர சோதனைக்கு பிறகே கச்சத்தீவு செல்ல அனுமதித்தனர். நேற்று மதியம் கச்சதீவு சர்ச் முன்புள்ள கொடிக்கம்பத்தில் திருவிழா கொடியை நெடுந்தீவு பாதிரியார் பத்திநாதன் ஏற்றி வைத்து விழாவை துவக்கி வைத்தார். நேற்று மாலை சர்ச் வளாகத்தில் இலங்கை பாதிரியார்கள் தலைமையில் நற்கருணை ஆராதனை, சிலுவைப்பாதை பூஜை நடத்தினர். இதனைத்தொடர்ந்து இரவு 9 மணிக்கு புனித அந்தோணியாரின் தேர்பவனி நடந்தத இதில் ஏராளமான இந்திய, இலங்கை பக்தர்கள் பங்கேற்று ஆசி பெற்றனர்.