Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சக்ர பகவதி அம்மன் கோயிலில் லட்சுமி ... கிருத்திகை விழா : முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு கிருத்திகை விழா : முருகன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலக்காடு பெருமாள் கோவிலில் மஹாபாரத சிவராத்ரி மஹோத்ஸவம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பாலக்காடு பெருமாள் கோவிலில் மஹாபாரத சிவராத்ரி மஹோத்ஸவம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

26 பிப்
2023
08:02

பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு கல்பாத்தி அருகே உள்ளது அய்யபுரம் ஸ்ரீ பெருமாள் சுவாமி கோவில். இங்கு என்ன ஆண்டும் மாசி மாதம் மகாபாரத சிவராத்திரி மகோத்ஸவம் நடப்பது வழக்கம். பத்து நாள் கொண்ட நடப்பாண்டு உற்சவத்தின் கொடியேற்றம் சிவராத்திரி நாளான 18ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்தனர்.


தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் உற்சவம் மூர்த்திகளுக்கு நடைபெற்றன. உற்சவத்தின் சிறப்பு நாளான இன்று காலை 4.30 மணிக்கு நிர்ம்மாலியதர்சனம், வாகச்சார்த்து, கணபதி ஹோமம், 7மணிக்கு கல்பாத்தி ஆற்றிலிருந்து செண்டை மேளம் முழங்க உற்சவருக்கு அபிஷேகம் செய்வதற்கான தீர்த்தம் கொண்டுவரும் வைபவம் நடந்தது. தொடர்ந்து 9க்கு அக்னிகுண்டம் திறப்பு, பறை எடுப்பு, புருஷசூக்த ஜபம், மூலவருக்கு அபிஷேகம், அலங்கரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. மாலை 5 மணிக்கு தாம்பூல வினியோகம், நிறைமாலை, சுற்று விளக்கு, அர்ச்சனை ஆகியவை நடந்தன. 7 மணிக்கு உற்சவ மூர்த்திகளை ஆடை ஆபரண அலங்காரத்துடன் முகமண்டபத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வைபவம் நடந்தது. 8.30க்கு அக்னி குண்டத்தில் பூ வளர்ப்பு, 11க்கு தாலம் எடுப்பு ஆகியவை நடைபெற்றது. நாளை அதிகாலை 4.30 மணிக்கு பக்தர்கள் பூ மிதித்து வழிபடும் வைபவம் நடந்தது. உத்ஸவத்தை காணவும் மூலவரை தரிசித்து வழிபடவும் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர். மார்ச் 1ம் தேதி உற்சவமூர்த்திக்கு நடக்கும் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
நாகர்கோவில், தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி விழாவில் ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 
temple news
அச்சிறுபாக்கம்:-அச்சிறுபாக்கத்தில் உள்ள இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவிலுக்கு செய்யப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar