Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சக்ர பகவதி அம்மன் கோயிலில் லட்சுமி ... கிருத்திகை விழா : முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு கிருத்திகை விழா : முருகன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலக்காடு பெருமாள் கோவிலில் மஹாபாரத சிவராத்ரி மஹோத்ஸவம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பாலக்காடு பெருமாள் கோவிலில் மஹாபாரத சிவராத்ரி மஹோத்ஸவம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

26 பிப்
2023
08:02

பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு கல்பாத்தி அருகே உள்ளது அய்யபுரம் ஸ்ரீ பெருமாள் சுவாமி கோவில். இங்கு என்ன ஆண்டும் மாசி மாதம் மகாபாரத சிவராத்திரி மகோத்ஸவம் நடப்பது வழக்கம். பத்து நாள் கொண்ட நடப்பாண்டு உற்சவத்தின் கொடியேற்றம் சிவராத்திரி நாளான 18ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்தனர்.


தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் உற்சவம் மூர்த்திகளுக்கு நடைபெற்றன. உற்சவத்தின் சிறப்பு நாளான இன்று காலை 4.30 மணிக்கு நிர்ம்மாலியதர்சனம், வாகச்சார்த்து, கணபதி ஹோமம், 7மணிக்கு கல்பாத்தி ஆற்றிலிருந்து செண்டை மேளம் முழங்க உற்சவருக்கு அபிஷேகம் செய்வதற்கான தீர்த்தம் கொண்டுவரும் வைபவம் நடந்தது. தொடர்ந்து 9க்கு அக்னிகுண்டம் திறப்பு, பறை எடுப்பு, புருஷசூக்த ஜபம், மூலவருக்கு அபிஷேகம், அலங்கரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. மாலை 5 மணிக்கு தாம்பூல வினியோகம், நிறைமாலை, சுற்று விளக்கு, அர்ச்சனை ஆகியவை நடந்தன. 7 மணிக்கு உற்சவ மூர்த்திகளை ஆடை ஆபரண அலங்காரத்துடன் முகமண்டபத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வைபவம் நடந்தது. 8.30க்கு அக்னி குண்டத்தில் பூ வளர்ப்பு, 11க்கு தாலம் எடுப்பு ஆகியவை நடைபெற்றது. நாளை அதிகாலை 4.30 மணிக்கு பக்தர்கள் பூ மிதித்து வழிபடும் வைபவம் நடந்தது. உத்ஸவத்தை காணவும் மூலவரை தரிசித்து வழிபடவும் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர். மார்ச் 1ம் தேதி உற்சவமூர்த்திக்கு நடக்கும் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: வளர்பிறை சஷ்டியொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; தொடர் விடுமுறையை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி வைபவம் பகல் பத்து உற்சவத்தின் 6 ம் நாளில் ... மேலும்
 
temple news
அன்னூர்; அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவில், இன்று கொடியேற்றம் நடந்தது.பழமையான, அன்னூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar