பதிவு செய்த நாள்
04
மார்
2023
02:03
தஞ்சாவூர்: கும்பகோணத்தில், மாசி மகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நான்கு திருத்தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், மாசிமகத்தை முன்னிட்டு, கடந்த பிப்.25ம் தேதி ஆறு சிவலாயங்களிலும், பிப்.26ம் தேதி மூன்று பெருமாள் கோவில்களிலும் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து காலை –மாலைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் வீதியுலா நடைபெற்று வருகிறது. இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வான,இன்று அதிகாலை 5:30 மணி முதல் 6:00 மணிக்குள் விநாயகர், முருகன் திருத்தேரோட்டமும், 11:00 மணிக்கு மேல் ஆதிகும்பேல்வரர், மங்களாம்பிகை அம்பாள் திருத்தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு கும்பேஸ்வரா.. கும்பேஸ்வரா எனத் தேரின் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேரில், தனித்தனியாக ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகையம்மன், விநாயகர், முருகன் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தனர். தொடர்ந்து மாலை 5:00 மணிக்கு ஆதிகும்பேஸ்வரர் கோவில் சண்டிகேஸ்வரர் தேரோட்டமும், காசிவிஸ்வநாதர், கவுதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர் ஆகிய மூன்று கோவிலின் தேரோட்டம் மகாமக குளத்தைச் சுற்றிலும், காலஹஸ்தீஸ்வரர் கோவிலில் நாளை (5ம் தேதி) சோமேஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடைபெறுகிறது. நாளை மறுநாள் (6ம் தேதி) மாசி மக தீர்த்தவாரி மகாமக குளத்தில் நடைபெறுகிறது. இதே போல் சக்கரபாணி, ராஜகோபாலசுவாமி, ஆதிவராகப்பெருமாள் கோவிலில், நாளை மறுநாள் (6ம் தேதி) காலை 9:00 மணிக்கு மேல் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.