Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் தண்ணீர் பஞ்சத்தைப் ... கமுதி அருகே சாக்கு ஆடை வழிபாடு கமுதி அருகே சாக்கு ஆடை வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நித்ய அன்னதான நன்கொடை : வைர அட்டை வழங்க திட்டம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

14 செப்
2012
11:09

திருச்சி : ""நித்ய அன்னதான திட்டத்துக்கு, ஏழு லட்ச ரூபாய் நன்கொடை வழங்குபவர்களுக்கு, "வைர அட்டை வழங்கப்படும். அதன் மூலம், தமிழக கோவில்களில், ஆயுள் முழுவதும், ஐந்து பேர் சிறப்பு தரிசனம் செய்யலாம், என, இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் கமிஷனர் தனபால் கூறினார். ஸ்ரீரங்கத்தில் நேற்று துவங்கிய நித்ய அன்னதான திட்டம் குறித்து, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் தனபால் கூறியதாவது: ஸ்ரீரங்கம் கோவிலில், நித்ய அன்னதான திட்டத்துக்காக, ஒரே நேரத்தில், 200 பேர் அமரும் வகையில், சாப்பாட்டுக் கூடம் ஒன்று புதிதாக கட்டப்படும். தற்போது அன்னதானத் திட்டத்தில் உள்ள, நான்கு பணியாளர்களுடன் மேலும், 30 பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஒரு சாப்பாடு, 25 முதல், 35 ரூபாய் மதிப்பில், வார நாளில் காலை முதல், இரவு வரை, சாதம், சாம்பார், ரசம், மோர், ஒரு கூட்டு அல்லது பொறியல் வழங்கப்படும். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில், இவற்றுடன், வடை, பாயாசமும் சேர்த்து வழங்கப்படும். உணவு, சாம்பார், ரசம் சூடாக வைத்து பரிமாற, மூன்று அடுக்கு கொண்ட, எட்டு டிராலிகள் வாங்கப்பட்டுள்ளன. தினமும், 200 பேர் உணவு அருந்துவர் என்றும், விடுமுறை நாட்களில், 500 முதல், 1,000 பேர் வரை, உணவு அருந்துவர் என்றும் எதிர்பார்க்கிறோம். வைகுண்ட ஏகாதசி போன்ற திருவிழா நாளில், ஆயிரக்கணக்கானோர் வந்தால் கூட, அன்னதானம் அளிக்கும் வகையில் திட்டமிட்டுள்ளோம். நித்ய அன்னதான திட்டத்துக்கு, ஏழு லட்ச ரூபாய் நன்கொடை வழங்குபவர்களுக்கு, "வைர அட்டை வழங்கப்படும். அதன்மூலம், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும், தமிழக கோவில்களில், ஆயுள் முழுவதும், ஐந்து பேர் சிறப்பு தரிசனம் செய்யலாம். விழாக் காலங்களில் இச்சலுகை செல்லுபடியாகாது. கோவில் திருப்பணிக்காக, ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்குபவர்களுக்கு, "பிளாட்டினம் அட்டை வழங்கப்படும். இதன் மூலம், தமிழக கோவில்களில், ஐந்து பேர் சிறப்பு தரிசனம் செய்வதோடு, இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான, "காட்டேஜ்களில் இலவசமாக தங்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு வைகாசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
மதுரை : சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை வந்த கள்ளழகர் பூப்பல்லக்கில் அழகர் கோவில் புறப்பட்டார். ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நடப்பாண்டுக்கான வைகாசி பிரம்மோத்சவம், கடந்த 11ம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி ரெணகாளிஅம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. பழநி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிவாச்சாரியார்கள் சமூகம் சார்பில் மஞ்சள் நீர் உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar