Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
யுகாதி பண்டிகை... வரசித்தி விநாயகர் ... யுகாதி பண்டிகை: தீர்த்தக்காவடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரியமாணிக்கர் கோவிலில் பஞ்சாங்கம் வாசிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மார்
2023
04:03

 நகரி:சித்துார் மாவட்டம், நகரி டவுனில் அமைந்துள்ளது கரியமாணிக்க பெருமாள் கோவில். நேற்று,சோபா கிருது தெலுங்கு வருடப் பிறப்வையொட்டி, மூலவருக்கு, அதிகாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

அதை தொடர்ந்து, காலை 6:00 மணி முதல், காலை 7:00 மணி வரை கோவில் குருக்கள் பிரசாத்வர்மா, உலக நன்மைக்காகவும், நம் நாட்டு மக்கள் நன்மைக்காகவும் பஞ்சாங்கம் வாசித்தார்.

பின் புதிய தெலுங்கு வருட பிறப்பில் உள்ள நன்மை, தீமைகள் குறித்து அங்கு கூடியிருந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள் மத்தியில் பஞ்சாங்கம் பார்த்து விளக்கி கூறினார். தெலுங்கு வருடப்பிறப்பை ஒட்டி இக்கோவிலுக்கு திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை மற்றும் சித்துார் மாவட்டம், நகரி, புத்துார் ஆகிய பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து சென்றனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

* திருத்தணி அடுத்த, பொன்பாடி, கொல்லகுப்பம் கிராமத்தில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவில், நெமிலி கிராமத்தில் உள்ள வைகுண்ட பெருமாள் ஆகிய கோவில்களில் தெலுங்கு வருடப் பிறப்வையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

* திருத்தணி கெங்குசாமி பள்ளியில், தெலுங்கு வருடப்பிறப்பையொட்டி, கம்மவார் சங்கத்தின் சார்பில் சிறப்பு ஹோமம்மற்றும் பஞ்சாங்கம் வாசிப்பு நிகழ்ச்சி நடந்தது.

* ஊத்துக்கோட்டை அடுத்த சுருட்டப்பள்ளி சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் மூலவர் வால்கிமீஸ்வரர், அன்னை மரகதாம்பிகை மற்றும் கோவிலில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜை நடந்தது. இதில், தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி, பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.

* ஊத்துக்கோட்டை அழகிய சுந்தர வரதராஜ பெருமாள் கோவில், நாகலாபுரம் வேத நாராயண சுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைக் கார்த்திகை, தெப்பம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: தை கிருத்திகையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகனுக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உற்சவத்தின் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னிதியில் தை கிருத்திகை ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமை  மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar