Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாகை ரத்தினகிரீஸ்வரர் கோவில் ... அருஞ்சுனை காத்த அய்யனார் கோயிலில் பங்குனி உத்திர கொடியேற்றம் அருஞ்சுனை காத்த அய்யனார் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

27 மார்
2023
04:03

நான்குநேரி: நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் பங்குனி உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.


நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், 8 சுயம்பு த்திரங்களில் முதன்மையானதும் ஆகும். இங்கு ஸ்ரீவரமங்கைத் தாயார் சமேத வானமாமலைப் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். மூலவர் சுயம்புவாக தோன்றியவர். இத்தலம் நம்மாழ்வாரால் 11 பாடல்கள் பாடப்பெற்றது திருத்தலமாகும். இக்கோயிலில் மட்டுமே ஜடாரியில் நம்மாழ்வார் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது இதனால் பூஜைகள் நடைபெறும் நேரம் தவிர மற்ற நேரங்களில் ஜடாரியில் ஆசீர்வாதம் கிடையாது. திருமலை திருப்பதியில் இருந்து இங்கு எழுந்தருளிய ஸ்ரீவரமங்கைத் தாயாருக்கும், வானமாமலை பெருமாளுக்கும் நடக்கும் திருக்கல்யாண உற்சவம் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பங்குனி திருக்கல்யாண திருவிழா என 11 நாட்கள் நடைபெறுகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை திருமுளைச்சாற்று மற்றும் சேனை முதல்வர் புறப்பாடு நடந்தது. நேற்று காலை கோயில் நடைதிறந்ததும் விஸ்வரூபம் தரிசனம், எண்ணெய்காப்பு காலைசந்தி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத தெய்வநாயகப்பெருமாள் கொடிமரத்திற்கு அருகில் எழுந்தருளினார். தொடர்ந்து நான்குநேரி மடத்தின் 31 வது மடாதிபதியான மதுரகவி வானமாமலை ராமானுஜஜீயர் ஆசிர்வாதத்துடன் கொடியேற்றம் நடந்தது. இதில் ஏராளமான க்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று இரவு கருடசேவை நடந்தது. வரும் 30ம் தேதி 5ம் திருநாள் கருடசேவையும், ஏப். 1ம் தேதி 7ம் திருநாளன்று சப்பரம், கண்ணாடி சப்பரம் பவனி நடக்கிறது. ஏப். 4ம் தேதி 10ம் திருநாளன்று காலையில் தங்க தேரோட்டம், இரவு வானமாமலை பெருமாள், ஸ்ரீவரமங்கைத் தாயாருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. பங்குனி உத்திர நாளில் தீர்த்தவாரி மற்றும் பட்டணபிரவேசம் வைபவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கூடலூர்; கூடலூரில், சத்திய சாய்பாபா நூற்றாண்டு விழா ரத யாத்திரை ஊர்வலம் சிறப்பாக நடந்தது.சத்திய ... மேலும்
 
temple news
சிவகங்கை; தாயமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழாவை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; பழநியில், சந்திர கிரகணத்தை குறிக்கும், 17ம் நுாற்றாண்டு கல்வெட்டு ஒன்று ... மேலும்
 
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் அறுபடை வீட்டிற்கு நிகரான மும்மூர்த்தி அவதாரத்தை ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar