மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ரங்கப்பனூரில் நடைபெற்ற தேரோட்டத்தில் தேரின் சக்கரம் உடைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த ரங்கப்பனூரில் உள்ள பாலமுருகன் கோவிலின் பங்குனி உத்திர தேரோட்டம் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் இன்று மதியம் வழக்கம் போல் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த தேரோட்டம் ரங்கப்பனூர் சேராப்பட்டு மெயின் ரோட்டில் உள்ள பாலமுருகன் கோவிலில் இருந்து ஆரம்பித்து மல்லாபுரம் செல்லும் மலைக்குன்று மேல் உள்ள முருகன் கோவில் வரை தேரு நடைபெறுவது வழக்கம். வழக்கம் போல் தேறினை ஊர் பொதுமக்கள் சேர்ந்து இழுத்துச் சென்ற போது மலை குன்று அருகே செல்லும்போது தேரின் வலதுபுற சக்கரம் உடைந்து நின்றது. இதனால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்பு வேறு ஒரு சக்கரத்தை கொண்டு வந்து மாற்றி உடனடியாக தேரை இழுத்துச் சென்றனர்.