Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம் : ... கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன் கோயிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம் கொல்லங்குடி வெட்டுடையாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாமக்கல் நரசிம்மர், அரங்கநாதர், ஆஞ்சநேயர் கோவில்களில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
நாமக்கல் நரசிம்மர், அரங்கநாதர், ஆஞ்சநேயர் கோவில்களில் தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

07 ஏப்
2023
08:04

நாமக்கல்: நாமக்கல்லில், பிரசித்தி பெற்ற நரசிம்மர், அரங்கநாதர், ஆஞ்சநேயர் கோவில்களில் பங்குனி மாதத்திருத்தேர் விழா நேற்று கோலாகலமாக நடந்தது.

நரசிம்மர், அரங்கநாதர் கோவில்களின் தேர்த்திருவிழா கடந்த மார்ச், 29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை பல்லாக்கு புறப்பாடு நடந்தது. தினமும் இரவு சுவாமி அன்னவாகனம், சிம்மவாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனங்களில் திருவீதி உலா வந்தார்.கடந்த, 4ல், குளக்கரை நாமகிரித்தாயார் மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அரங்கநாதர், நரசிம்மருக்கு திருக்கல்யாணம் நடந்தது. 5ல், குதிரை வாகனத்தில் திருவேடு பரிஉற்சவம் நடந்தது. நேற்று காலை, 9:30 மணிக்கு நரசிம்மர் கோவில் திருத்தேர் திருவீதி உலா நடந்தது. எம்.பி.,சின்ராஜ், நகராட்சி சேர்மன் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா, அறங்காவலர் குழு தலைவர் நல்லுசாமி உள்ளிட்டோர், திருத்தேர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். தேரோட்டம் கோட்டை சாலை, ஆஞ்சநேயர் கோவில் வழியாக வந்து மீண்டும் நிலையடைந்தது.


மாலை, 4:30 மணிக்கு தேர் நிலையத்தில் இருந்து அரங்கநாதர், ஆஞ்சநேயர் திருத்தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்பட்டன. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தேர் சென்ற வீதிகளில் பல்வேறு அமைப்பினர் சார்பில் பானகம், நீர்மோர், அன்னதானம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இன்று கஜலட்சுமி வாகனத்தில் திருவீதி உலா, நாளை வசந்த உற்சவம், ஏப்.,9ல் மின் அலங்காரத்துடன் விடையாற்றி உற்சவம், 10ல், புஷ்ப பல்லாக்கு, ஏப்.,11, 12ல், நாமகிரி தாயார் சன்னதியில் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில், ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயில்களில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் இன்று மோகினி ... மேலும்
 
temple news
திருப்பதி;  ஜனாதிபதி திரௌபதி முர்மு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி இன்று தரிசனம் ... மேலும்
 
temple news
டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
கோவை;  கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar