Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புளியரை தெட்சிணாமூர்த்தி கோயிலில் ... அவிநாசி அழகு நாச்சியம்மன் பொங்கல் பூச்சாட்டு விழா தொடங்கியது அவிநாசி அழகு நாச்சியம்மன் பொங்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மன் கோவில் விழாவில் பக்தர்களுக்கு சாட்டையடி
எழுத்தின் அளவு:
மாரியம்மன் கோவில் விழாவில் பக்தர்களுக்கு சாட்டையடி

பதிவு செய்த நாள்

12 ஏப்
2023
10:04

நாமகிரிப்பேட்டை: சீராப்பள்ளி மாரியம்மன் கோவில் விழாவில், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த சாட்டையடி வாங்கினர்.

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த, சீராப்பள்ளி  மாரியம்மன் கோவில் பண்டிகை கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு பூச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை பக்தர்கள் ஊர்வலமாக  கோவிலை சுற்றி வந்தனர்.  பின்னர் பூச்சட்டியில் இருந்த நெருப்பை, கோவில் முன் கொட்டியவுடன், பக்தர்கள் அதை  திருநீராக எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டனர். தொடர்ந்து சாட்டையடி நிகழ்ச்சி நடந்தது. அருள் வந்த  பூசாரி, பக்தர்களை சாட்டையால் அடித்து ஆசி வழங்கினார். பக்தர்கள் தங்களது பிரார்த்தனை நிறைவேறினாலும் அல்லது ஏதாவது ஒரு கோரிக்கையை மனதில் நினைத்துக் கொண்டு பூசாரி முன் வந்து கையை துாக்கி வரிசையாக நிற்கின்றனர். சாட்டையுடன் நிற்கும் பூசாரி அருள் வந்து பக்தர்களை அடிக்கிறார். ஒவ்வொருவராக வரும் பக்தர்கள்,  கையை உயர்த்தி நடனமாடி கொண்டே சாட்டையடி வாங்கி செல்கின்றனர். இந்த விநோத பழக்கம் பல ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இது குறித்து சீராப்பள்ளியை சேர்ந்த பக்தர்கள் கூறியதாவது: தங்களது பிரார்த்தனை நிறைவேறினால் சாட்டையடி நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். மேலும், சட்டையடி வாங்கினால் தீமை விலகி, நன்மை நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளதால் குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என அனைவரும் வேண்டுதல் இல்லை என்றாலும், பூசாரி கையால் சாட்டையடி வாங்கி கொள்கின்றனர். இவ்வாறு கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி இன்று. இரவு சந்திரன் ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் 9வது ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று நடந்த கிருத்திகை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வேகவதி ஆற்றங்கரையோரம், 16ம் நுாற்றாண்டின் விஜயநகரப் பேரரசு கால சதிகல் சிற்பம் ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், மங்கள வேல் வழிபாடு நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar