திருத்தங்கல் மாரியம்மன் கோயிலில் பங்குனி தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஏப் 2023 05:04
சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
சிவகாசி அருகே திருத்தங்கல் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா ஏப். 2 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் அம்மன் காமதேனு, சிம்மம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏப். 10 ல் பொங்கல் திருவிழா, ஏப். 11 ல் கயர் குத்து திருவிழா நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான.தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருள ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.